ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. தமிழகம் முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. போலீஸ் குவிப்பு!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கலவரம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக போடப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த வாக்குகள் மொத்தம் 315 மையங்களில் இன்று எண்ணப்படுகிறது.

Tamilnadu Local body elections: Police protection increased all over the state

மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை . இதில் ஊராட்சி தலைவர் தேர்தல் கட்சியை சார்பற்று தேர்தல் நடந்தது.அதேபோல் 5,090 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 9,624 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

இன்று நடக்கும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க பாதுகாப்பு பணியில் 45 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வடமாவட்டங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சில மாவட்டங்களில் மட்டும் தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் தேர்தல் பாதுகாப்பு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பாதுகாப்பு பணிகள் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+