தமிழ்நாட்டில் தீவிரம் அடையும் கட்டுப்பாடு.. இனி மாஸ்க் போடலைனா ரூ. 500 பைன்.. அரசு சொல்வது என்ன?
சென்னை: முகக்கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலுக்கு இடையில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தொடர்ந்து கேஸ்கள் உயர்ந்து வருவதால் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு 1 வாரத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இரவு நேர லாக்டவுன், ஞாயிறு முழு லாக்டவுன் மட்டும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி பெரும்பாலான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டு உள்ளது.

மக்கள் கூட்டம்
பண்டிகை காலம் என்பதால் மக்கள் வெளியே செல்வது அதிகரித்து இருக்கிறது. இதை முன்னிட்டே வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டு உள்ளது. ஆனால் பொங்கலுக்கு உடை எடுப்பது, நகை வாங்குவது என்று மக்கள் அதிக அளவில் வெளியே செல்கிறார்கள். இதனால் தமிழ்நாடு முழுக்க கொரோனா கேஸ்கள் உயர்ந்து வருகிறது. சென்னையிலும் தினசரி கொரோனா கேஸ்கள் 7 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

தமிழ்நாடு கொரோனா
தமிழ்நாட்டில் நேற்று 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் 7372 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு விரைவில் 20 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலுக்கு இடையில் தமிழ்நாட்டில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் 88,959 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓமிக்ரான் கேஸ்கள்
தமிழ்நாட்டில் பதிவாகும் கேஸ்களில் பெரும்பாலான கேஸ்கள் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும். இந்த நிலையில் லாக்டவுன் விதிகள் தமிழ்நாட்டில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மாஸ்க் அணிகிறார்களா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை தன்னார்வலர்கள் உதவியுடன் தமிழ்நாடு சுகாதாரத்துறை சோதனை செய்து வருகிறது. மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றும் நபர்களுக்கு இவர்கள் அபராதம் விதித்து வருகிறார்கள்.

அபராதம் உயர்ந்தது
இந்த நிலையில்தான் முகக்கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது. மாஸ்க் அபராதம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. லாக்டவுன் கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். மாஸ்க்கை முழுமையாக அணிய வேண்டும். மாஸ்க் முழுமையாக அணியவில்லை என்றாலும் அபராதம் விதிக்கப்படும், என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video

விதி மீறல்
கழுத்தில் மாஸ்க் போடுவது, வயிறுக்கு கீழ் மாஸ்க் போடுவது, மூக்கை மறைக்காமல் மாஸ்க் போடுவது போன்ற செயல்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இது சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாடு முழுக்க இன்று முதல் மாஸ்க் அணியாமல், அல்லது முறையாக மாஸ்க் அணியாமல் செல்லும் நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications