மஞ்சள் அலர்ட்.. சென்னையில் இரவிலிருந்து வெளுத்து வாங்கும் மழை.. மீண்டும் மழை நீர் தேங்கும் அபாயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது. இரவில் இருந்து விடிய விடிய இருந்து பல்வேறு இடங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான இது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

இன்னும் 12 மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழை

மழை

இந்த நிலையில் சென்னைக்கு இன்றும், நாளையும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் அலர்ட் காரணமாக இரவில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இன்று சென்னையில் 12-20 செமீ வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த 1 மணி நேரமாக சென்னையில் விடாமல் மழை பெய்து வருகிறது.

சென்னை

சென்னை

இரவில் இருந்து விடிய விடிய கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை நீர் லேசாக வடிந்த நிலையில் மழையால் மேலும் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் மழை, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்து தீவிர கனமழை பெய்து வருகிறது.

தீவிரம்

தீவிரம்

குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் சாலைகளில் அதிக அளவில் நீர் தேங்கி வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

Recommended Video

    சென்னையில் விரைவில் மழை தொடங்கும்.. Tamilnadu Weatherman தகவல்
    புரட்டி எடுத்து வருகிறது

    புரட்டி எடுத்து வருகிறது

    சென்னையில் மழை காரணமாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் தற்போது 20.37 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. ஆனால் இன்றைய மழையால் மீண்டும் அங்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது வினாடிக்கு 2,000 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+