துபாய் டூ சென்னை.. உயிருக்கு போராடியபடி வந்த சபியுல்லா.. நெகிழ வைத்த சென்னை டிராபிக் போலீஸ்
சென்னை: துபாயில் உடல் நிலை பாதிப்பால் உயிருக்கு போராடி மேல்சிகிச்சைக்காக சென்னை வந்தவர், போக்குவரத்து போலீசாரின் உதவியால் நெரிசல் இன்றி சென்று ராஜீவ காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு சென்னையில் மருத்துவ வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதில் இருந்தும் பலரும் புற்றுநோய், கல்லீரல் பிரச்சனை, இதய அறுவை சிகிக்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உயர்சிகிச்சைகாக சென்னை வருகிறார்கள்.

இந்தியாவை தாண்டி வெளிநாடுகளில் இருந்தும் பலரும் சென்னைக்கு தான் மருத்துவ சிகிக்சை பெற அதிக அளவில் வருகிறார்கள். சென்னையில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற தனியார் மருத்துவமனைகள் உள்ளன. ஓமந்தூரார், ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் , எழும்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளும் சென்னையில் தான் இருக்கின்றன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தில் சிறப்பு அம்சம் கொண்டவை. உதாரணத்திற்கு கீழ்பாக்கம் மருத்துவமனை தீ தடுப்பு காயத்திற்கும். தாம்பரத்தில் உள்ள மருத்துவமனை காச நோய்க்கும், ஓமந்தூர் ஸ்கேன் மற்றும் பல்வேறு உயர் சிகிச்சைக்கும், ஸ்டான்லி அறுவை சிகிக்சைக்கும் புகழ் பெற்றவை, ராஜீவ் காந்தி மருத்துவமனை எல்லா வகையான சிகிச்சைகளும் உள்ள பெரிய மருத்துவமனையாகும்.
சென்னையில் அப்பல்லோ, காவேரி, மலர், மியாட் உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளும் மிகப்பெரிய அளவில் வசதிகள் கொண்டுள்ளவை ஆகும். இதனால் பலரும் மருத்துவ கிசிச்சைக்காக சென்னை வருகிறார்கள். மருத்துவ டூர் விசா பெற்று வெளிநாட்டினர் பலரும் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். வெளிநாடுகளில் பல லட்சம் ஆகும் என்றால் என்றால் இங்கு மிகமிக கட்டணம் குறைவு, மற்றும் தரமான வசதி உள்ளிட்டவை காரணம் ஆகும்.
சென்னைக்கு அப்படித்தான் ஒருவர் சிகிச்சை பெற வந்தார். அவருக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை செய்த உதவிக்காக அவர் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டிருந்த பதிவில், "துபாயில் உயிருக்கு போராடி மேல்சிகிச்சைக்காக சென்னை விமான நிலையம் வந்த சபியுல்லா, விமானநிலையம் முதல் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை வரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செல்ல சென்னை போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு அவரது குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் தங்களது நன்றியை தெரிவித்தனர்." என்று கூறப்பட்டுள்ளது.
இதை பார்த்த நெட்டிசன்கள், இதுதான் சார் மனிதநேயம்.. உங்களுக்கு எங்களது நன்றிகள் என்று பாராட்டி வருகிறார்கள். இதுபோன்ற சேவைகளை செய்த அனைத்து போலீசாருக்கும் நன்றி என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications