ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கும் 'ரத்தம்'.. தலைகீழா நின்னாலும் இங்கே கிடைக்காது - சுப.வீரபாண்டியன் பரபர!
சென்னை : ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கும் ரத்தம் மத்திய பிரதேசத்தில், உத்தர பிரதேசத்தில் கிடைக்கும். தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் கிடைக்காது என சுப.வீரபாண்டியன் பேசியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த மேடையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலுரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக - அதிமுக
திமுக சார்பில் நடைபெற்ற இந்த 'முப்பெரும் விழா' கூட்டத்தில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், "திமுக எப்போதும் சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும். தமிழில் எப்போதுமே ஒரு பொருளுக்கு முன் அ என்ற எழுத்தை சேர்த்தால் அது எதிர் பொருளைத்தான் தரும். அதுபோல திமுகவிற்கு எதிர்ப்பொருள் அதிமுக அவ்வளவுதான் என்று கருணாநிதி கூறுவார். திமுக ஆட்சி 5 அடி முன்னேற்றினால் அதிமுக 10 அடி பின்னோக்கி கொண்டு செல்லும்.

இனிமேல் திமுக தான்
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர் திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டது. இதுதான் திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம். தமிழகத்தை இனிமேல் திமுக தான் ஆட்சி செய்யும்." எனப் பேசினார்.

ஆர்.எஸ்.எஸ் நோக்கம்
அப்போது, தமிழகத்தில் தற்போது ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்று பொதுமக்களில் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்துப் பேசிய சுப.வீரபாண்டியன், "மதம் என்கிற பெயரால் மக்களை பிளவுபடுத்துகின்ற முயற்சியினை ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஏதேனும் நிகழ்வை நடத்தி கலவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்.

தமிழ்நாட்டில் கிடைக்காது
ஆனால் ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கும் ரத்தம் மத்திய பிரதேசத்தில், உத்தர பிரதேசத்தில் கிடைக்கும். தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் கிடைக்காது. அதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லை" என சுப.வீரபாண்டியன் பேசினார். மேலும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும், திமுக அரசு செய்த சாதனைகள் பற்றியும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.
-
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே!












Click it and Unblock the Notifications