Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கும் 'ரத்தம்'.. தலைகீழா நின்னாலும் இங்கே கிடைக்காது - சுப.வீரபாண்டியன் பரபர!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கும் ரத்தம் மத்திய பிரதேசத்தில், உத்தர பிரதேசத்தில் கிடைக்கும். தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் கிடைக்காது என சுப.வீரபாண்டியன் பேசியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த மேடையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலுரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 திமுக - அதிமுக

திமுக - அதிமுக

திமுக சார்பில் நடைபெற்ற இந்த 'முப்பெரும் விழா' கூட்டத்தில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், "திமுக எப்போதும் சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும். தமிழில் எப்போதுமே ஒரு பொருளுக்கு முன் அ என்ற எழுத்தை சேர்த்தால் அது எதிர் பொருளைத்தான் தரும். அதுபோல திமுகவிற்கு எதிர்ப்பொருள் அதிமுக அவ்வளவுதான் என்று கருணாநிதி கூறுவார். திமுக ஆட்சி 5 அடி முன்னேற்றினால் அதிமுக 10 அடி பின்னோக்கி கொண்டு செல்லும்.

இனிமேல் திமுக தான்

இனிமேல் திமுக தான்

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர் திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டது. இதுதான் திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம். தமிழகத்தை இனிமேல் திமுக தான் ஆட்சி செய்யும்." எனப் பேசினார்.

ஆர்.எஸ்.எஸ் நோக்கம்

ஆர்.எஸ்.எஸ் நோக்கம்

அப்போது, தமிழகத்தில் தற்போது ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்று பொதுமக்களில் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்துப் பேசிய சுப.வீரபாண்டியன், "மதம் என்கிற பெயரால் மக்களை பிளவுபடுத்துகின்ற முயற்சியினை ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஏதேனும் நிகழ்வை நடத்தி கலவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்.

தமிழ்நாட்டில் கிடைக்காது

தமிழ்நாட்டில் கிடைக்காது

ஆனால் ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கும் ரத்தம் மத்திய பிரதேசத்தில், உத்தர பிரதேசத்தில் கிடைக்கும். தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் கிடைக்காது. அதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லை" என சுப.வீரபாண்டியன் பேசினார். மேலும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும், திமுக அரசு செய்த சாதனைகள் பற்றியும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+