Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நள்ளிரவு நேரம்... சைக்கிளில் இணை ஆணையர் திடீர் விசிட்...அதிர்ந்த இரவு காவலர்கள்

சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவில் திடீரென சைக்கிளில் சென்று காவலர்களை கண்காணித்துள்ளார். இவரது இந்த திடீர் ஆய்வு காவலர்களை பதறவைத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவில் திடீரென சைக்கிளில் சென்று இரவு ரோந்து காவலர்களை கண்காணித்ததோடு, காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Recommended Video

    சென்னை: வாத்தி ரெய்டு... நள்ளிரவில் சைக்கிளில் விசிட் அடித்த ரம்யா பாரதி... பதறிப்போன காவல் அதிகாரிகள்!

    சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக ரம்யா பாரதி ஐபிஎஸ் இருந்து வருகிறார். இவர் 2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார்.

    இவரை கடந்த ஜனவரி மாதம் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. அப்போது முதல் தன்னுடைய பணிகளை இவர் சிறப்பாக செய்து வருவதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

     காவல்துறையினர் அலர்ட்

    காவல்துறையினர் அலர்ட்

    அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். "தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து நான் சமரசம் செய்து கொள்ளமாட்டேன் என்று கறாராக பேசினார். முதல்வரின் இந்த பேச்சு காவல்துறையினர் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது. சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    பணி நேரத்தில் செல்போன் பேச தடை

    பணி நேரத்தில் செல்போன் பேச தடை

    பணிக்கு வந்தவுடன் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல் பணி முடிந்து போகும்போது இன்று என்னென்ன வேலைகளை பார்த்தேன் என்ற விவரங்கள் அனுப்ப வேண்டும். மேலும், பணி முடிந்துப்போகும் போதும் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரம்யாபாரதி ஐபிஎஸ்

    ரம்யாபாரதி ஐபிஎஸ்

    இந்நிலையில், சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவில் திடீரென சைக்கிளில் சென்று காவலர்களை கண்காணித்துள்ளார். அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி காலை 4 மணி வரை சைக்கிளில் பயணம் செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் அப்போது இரவு பணியில் இருந்த காவலர்களிடம் அங்கு இருக்கும் நிலை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

    இரவு ரோந்து பணி

    இரவு ரோந்து பணி

    சென்னை பாரிமுனை பூக்கடையில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை 8 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட சரகங்களில் சைக்கிளில் சென்று இணை ஆணையர் ரம்யா பாரதி ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக இரவில் ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தார். அப்போது, இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இணை ஆணையரின் இந்த திடீர் விசிட்டால் காவலர்கள் அதிர்ந்து போனார்கள் என்றே சொல்லலாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+