அ.தி.மு.க.வில் இருந்து.. முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் நீக்கம்.. ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அறிவிப்பு!
சென்னை: முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
வாணியம்பாடி முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீலுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றிப்பெற சரியாக அவர் சரியாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதன் காரணமாகவே அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
அ.தி.மு.க.வின் கே.சி.வீரமணி திட்டமிட்டே எனக்கு சீட் தரக்கூடாது என்று கூறியதாகவும், தி.மு.க.வின் துரைமுருகனும், கே.சி.வீரமணியும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டதாக அப்போது நிலோபர் கபீல் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் நிலோபர் கஃபீலை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். கட்சிக்கட்டுப்பாட்டைமீறியதாலும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் நிலோபர் கஃபீல் நீக்கப்பட்டுள்ளதாக என ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications