ஆகா இப்படி ஒரு நல்ல போலீசா? காவல் நிலையத்தில் நூலகம் - முன்மாதிரியாக திகழும் தேனி சின்னமனூர் போலீஸ்
தேனி: சின்னமனூரில் உள்ள காவல்நிலையம் வரும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏராளமான புத்தகங்களை கொண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
காவல்நிலையம் என்றாலே தீண்டத்தகாத இடம் என்ற மனநிலை நம் மக்களிடம் இருந்து இன்னும் மாறவில்லை.
காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லி போலீசார் எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலும் ஆங்காங்கே சில போலீஸ் அதிகாரிகள் செய்யும் தவறுகள் மற்றும் அத்துமீறல்களால் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதே பழி விழுகிறது.

முன்மாதிரி காவல் நிலையம்
இத்தகைய சூழலில்தான் மற்ற காவல்நிலையங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையம். காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான உறவை ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உதவும் வகையிலும் நூலகம் ஒன்று காவல் நிலைய வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

700-க்கும் மேற்பட்ட நூல்கள்
இனி சின்னமனூர் காவல்நிலையத்துக்கு நீங்கள் சென்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டால் கவலை வேண்டாம். அங்குள்ள நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை வாசித்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம். காவல்நிலையத்தின் இந்த நூலத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 700-க்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இனி சின்னமனூர் காவல்நிலையத்துக்கு நீங்கள் சென்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டால் கவலை வேண்டாம். அங்குள்ள நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை வாசித்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம். காவல்நிலையத்தின் இந்த நூலத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 700-க்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

மாணவர்களுக்கு உதவ நூலகம்
இதுகுறித்து காவல்நிலையத்தின் ஆய்வாளர் சேகர் தெரிவிக்கையில், "இப்பகுதியில் நூலக வசதி இல்லாததால் இதை அமைத்து இருக்கிறோம். இந்த காவல்நிலையத்தை சுற்றிலும் 8 உயர்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம் 15 பள்ளிகள் உள்ளன. எனவே மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் வைத்திருக்கிறோம். அதேபோல் செய்தித்தாள்களும் இதழ்களும் இங்குள்ளன.

காவல் நிலையத்துக்கு மக்களை வரவழைக்க வேண்டும்
மாணவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களும் காவல் நிலையத்தை புகாரளிப்பதற்கான இடமாகவும், குற்றவாளிகளை கையாள்வதற்கான இடமாக மட்டும் பார்க்கக்கூடாது. இதை அவர்களுக்கான இடமாக ஆக்க வேண்டும். இளைஞர்கள் மனதை நல்ல திசையில் வழிநடத்துவதும் போலீசின் கடமை. இங்குள்ள நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக அவர்கள் நல்வழிக்கு செல்வார்கள்." என்கிறார் நம்பிக்கையுடன்.

எப்படி வந்தது இந்த ஐடியா?
காவல்நிலைய வளாகத்தில் பயன்பாடில்லாத பொருட்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு அறையை பார்த்தவுடன் அதில் நூலகம் அமைக்கலாம் என்ற யோசனை காவல் ஆய்வாளர் சேகருக்கு தோன்றி இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷிடம் சேகர் தெரிவிக்க அவர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட புத்தகங்களை சிறுக சிறுக சேமித்து இந்த நூலகத்தை அமைத்திருக்கிறார் சேகர்.

20 பேர் அமர்ந்து வாசிக்கலாம்
700 புத்தகங்களை கொண்ட இந்த நூலகத்தில் ஒரே நேரத்தில் 20 பேர் அமர்ந்து வாசிக்க முடியும். தினசரி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த நூலகத்தை பயன்படுத்தலாம். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கான புத்தகங்கள் இங்கு அதிகம் இருப்பதால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரம் மற்ற நூலகங்களை போல புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்க அனுமதி வழங்குவதில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.

குற்றவாளிகளுக்கு புத்தகம்
இனி வரும் காலங்களில் குற்றவாளிகளை புத்தகம் படிக்க அனுமதிக்கலாம் என பரிசீலித்து வருவதாகவும், அதன் மூலம் அவர்களின் மனநிலை மாற்றமடைய வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர் அதிகாரிகள். இந்த நூலகத்தின் வாயிலாக ஒருவராவது போட்டித் தேர்வுகளின் வெற்றிபெற வேண்டும் என்பதே தனது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு என்று கூறுகிறார் ஆய்வாளர் சேகர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications