Tamilnadu lockdown: இன்று பொது போக்குவரத்து இயங்காது.. வேறென்னவெல்லாம் இயங்காது லிஸ்ட் இதோ!
சென்னை: தமிழகத்தில் இன்று பொது போக்குவரத்தும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதங்களில் வெறும் 3 இலக்கத்தில் இருந்த தினசரி தொற்று இன்று 5 இலக்கமாக உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டன. இதை சிறப்பாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் பணியாற்றி வருகின்றன.

முழு லாக்டவுன்
இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் பண்டிகை என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக பொழுதை கழிக்க குவிவார்கள் என்பதால் அன்றைய தினம் முழு லாக்டவுன் போடப்பட்டது. ஆனால் இநத வாரம் 23 ஆம் தேதி முழு லாக்டவுன் இருக்காது என சொல்லப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன்
ஆனால் கேஸ்களின் எண்ணிக்கை கருத்தில் கொண்டும் கொரோனா பரவலை தடுக்கவும் இன்றைய தினம் முழு லாக்டவுன் பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் ஊரடங்கின் போது என்ன மாதிரியான தடைகள், அனுமதிகள் இருந்ததோ அதே இந்த வாரமும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் இல்லை
வழக்கமாக முழு லாக்டவுனின் போது பேருந்துகள் இயக்கப்படாது. அதே போல் இந்த முறை பேருந்துகள இயக்கப்படாது. ஆனால் எழும்பூர், கோயம்பேடு, சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களிலிருந்து ஆட்டோக்கள் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இது மாவட்ட பேருந்து நிலையம், ரயில்நிலையங்களுக்கும் பொருந்தும். அது போல் செயலி மூலம் முன் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், கால்டாக்சியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளும் இல்லை
அது போல் இன்றைய தினம் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாது. எனவே அத்தியாவசியத் தேவைகளை தவிர அதுவும் அரசு அனுமதித்த சேவைகளை தவிர மற்றவர்கள் யாரும் இன்று வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. அது போல் பால், மருந்து கடைகளை தவிர வேறு எந்த கடைகளும் திறந்திருக்காது.
-
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications