'தமிழ்நாடு எனும் தனி நாடே இறுதி இலக்கு'.. அதுதான் தமிழ் தேசியம்! திருமாவளவன் கொளுத்திய சரவெடி!
சென்னை: தமிழ்நாடு எனும் 'தனி நாடு' அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல, தமிழ் தேசிய இயக்கத்தில் விசிகவின் பங்களிப்பு மகத்தானது எனவும், பெரிய பெரிய கட்சிகள் செய்ய முடியாததை விசிக செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

நூல் வெளியீடு
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர் ஜெ.பாரத் எழுதிய 'திருமாவின் சிந்தனை கோட்பாடுகள்' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், அவர் பேசியதாவது, "அரசியல் என்பது பதவிக்காக, அதிகாரத்திற்காக பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்கிற உணர்வு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. மிக மிக குறைந்த நபர்கள்தான் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டி விவாதிக்கிறார்கள். அனைத்து காட்சியிலும் இந்த நபர்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளனர்.

செயல் திட்டம்
ஆனால் அப்படிப்பட்டவர்கள்தான் முக்கிய பொறுப்புகள் பெற்று கட்சியை வழி நடத்துவார்கள். 'அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி' என்பது கொள்கையா? கோட்பாடா? என பலர் கேள்வியெழுப்புகின்றனர். அவர்களுக்கான பதில் இதுதான். அதாவது இது ஒரு செயல் திட்டம். ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இவை மூன்றும்தான் உழைக்கும் மக்களுக்கு பகை. சாதி, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், குடும்பம், என இவை எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆக இவற்றிற்கு எதிராக ஒடுக்கப்படுகிற மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கொள்கை முழக்கம்தான் 'அடங்க மறுத்தல், அத்துமீறுதல், திருப்பி அடித்தல்'.

சாதி தூய்மை வாதம்
இது வன்முறை முழக்கம் அல்ல, வன்முறைக்கு எதிரான முழக்கம். மராத்வாட பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போது காவல் துறை எங்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு விசிக பின்வாங்கிவிடாது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இது ஒருபுறம் எனில் மறுபுறம் ஆணவ கொலைகள் குறித்து நாம் விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஆணவ கொலைகளை ஆதரிக்கிறவர்கள் சாதி தூய்மைவாதிகள். தூய்மை வாதம் என்பது பழமை வாதம், சனாதனத்தின் ஒரு கூறு.

தனி நாடு
இவற்றையெல்லாம்தான் நாம் எதிர்க்கிறோம். நம்முடைய தளம் தமிழ் தேசியம். இந்த எதிர்ப்பு நம்முடைய இயக்கத்தின் ஒரு கூறு. தமிழ் தேசிய இயக்கங்களில் விசிகவின் பங்களிப்பு மகத்தானது. பெரிய பெரிய கட்சிகள் செய்ய முடியாததை சாத்தியப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் ஒன்றியமாகதான் மத்திய அரசு இருக்க வேண்டும். மாநிலங்களின் ஒன்றியம் என்பதை விட தேசிய இனங்களின் ஒன்றியம் என இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications