இடி, மின்னலுடன் வெளுத்துக் கட்டிய கனமழை... தலைநகர் மக்கள் மகிழ்ச்சி
Recommended Video

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்று சென்னை மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் சுழற்சி நிலவுவதால், அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவில் சென்னை மற்றும் புறநகரில் கனமழை பெய்தது. குறிப்பாக, கோடம்பாக்கம், அசோக்நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, திருவான்மியூர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி போன்ற புறநகர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
அதே போன்று காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை வெளுத்து வாங்குவதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் இருந்து திறந்து விடப்பபடும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!












Click it and Unblock the Notifications