கருணாநிதி ஆட்சியில் டிஜிபியாக இருந்த முகர்ஜி காலமானார்.. போலீசார் சோகம்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி முகர்ஜி (75), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் 2006 முதல் 2007 வரை சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பதவி வகித்தவர் டி.முகர்ஜி. பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னை மணப்பாக்கத்தில் வசித்து வந்த முகர்ஜி, அண்மைக்காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழகக் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

முன்னாள் டிஜிபி முகர்ஜி
தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான டி.முகர்ஜி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவல்துறையில் பணியாற்றி உள்ளார். சிபிஐயிலும் நீண்டகாலம் பணிபுரிந்துள்ளார். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது கடந்த 2006 மற்றம் 2007ஆம் ஆண்டுகளில் தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றார் முகர்ஜி.

காவல்துறையினர் சோகம்
பின்னர் தனது குடும்பத்துடன் சென்னை ராமாபுரத்தை அடுத்த மணப்பாக்கம் ஐபிஎஸ் அதிகாரிகள் காலணியில் வசித்து வந்த அவர், சில காலமாக முதுமை காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் முன்னாள் டிஜிபி முகர்ஜி காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. முகர்ஜி உடலுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் காவல்துறை டிஜிபி முகர்ஜி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "காவல்துறை முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவு செய்தி கேட்டு துயரத்திற்கு உள்ளானேன். முகர்ஜி கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழக அரசில் தமிழக காவல்துறைத் தலைவராகச் சிறப்புற பணியாற்றியவர்.

புலனாய்வு அமைப்பு
நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐஇல் நீண்ட காலம் பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். காவல்துறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய முகர்ஜியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரோடு பணியாற்றிய காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications