4 “முதலமைச்சர்கள்”.. எடப்பாடி சொன்ன “வார்த்தை”! பாய்ண்டை பிடித்த ஸ்டாலின் - மேடையில் “விளாசல்”
சென்னை: தற்போது 4 முதலமைச்சர் ஆட்சி செய்வதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், நல்ல ஆலோசனைகளை வழங்கும் அனைவரது ஆட்சி இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநாடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், "இந்த ஆட்சியின் மீது இட்டுக்கட்டிய கதைகளை எல்லாம் அவதூறாக போட நினைக்கிறார்கள். இன்று அவர்கள் போடும் ஆர்ப்பாட்ட கோஷங்கள் எல்லாம் மக்களுக்கு தெரியாதா? மக்கள் புரிந்துகொள்ளாமலா உள்ளார்கள்?

என்றும் உங்களுடன்
எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் எப்போதும் உங்களோடு இருக்கக்கூடியவர்கள் நாங்கள். அதிகாரத்துக்கு வந்துவிட்ட காரணத்தால் விலகிவிட்டு செல்பவர்கள் அல்ல நாங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செல்லும் ஆலோசனைகளை, கோரிக்கைகளின் நியாயங்களை அறிந்து எந்தளவுக்கு செயல்படுத்துகிறோம் என்பது அவருக்கும் புரியும். உங்களுக்கும் புரியும்.

அதிமுக ஆட்சி
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னாரே.. அந்த ஆட்சிதான் இங்கு நடக்கிறது. இதை ஒரு கட்சியின் ஆட்சியாக கருத தேவையில்லை. இனத்தின் ஆட்சி என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால், சொந்த புத்தியும் இல்லாமல் சுயபுத்தியும் இல்லாமல் இருந்த கடந்த கால ஆட்சியை போன்றது அல்ல இந்த ஆட்சி.

திராவிட மாடல்
இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் என்ற பெரும் தத்துவம். இந்த திராவிட மாடல் ஆட்சி அனைவரும் விரும்பக்கூடிய ஆட்சியாக அனைவரின் ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட்டு உள்ளது. இன்னும் பல கோரிக்கைகள் உள்ளன. அதை நான் மறக்கவில்லை. மறைக்கவில்லை.

நிரந்தர ஆட்சி
உங்கள் கோரிக்கைகளை எந்தெந்த நிலையில் நிதி ஆதாயங்கள், சட்ட விதிகளை அடிப்படையாக வைத்து உறுதியாக நிறைவேற்றப்படும். நீங்கள் கவலைப்படாதீர்கள். இது உங்கள் ஆட்சி. இன்னும் சொல்லப்போனால் இது நிரந்தரமான ஆட்சி. என் மீதுள்ள இருமாப்பில் சொல்லவில்லை. உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் சொல்கிறேன்." என்றார்.
-
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்!












Click it and Unblock the Notifications