எங்களின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. லோக்சபாவில் நிறைவேறிய மசோதாவுக்கு ஸ்டாலின் வரவேற்பு!
சென்னை : பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
குருவிக்காரர், நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா
நாடாளுமன்ற மக்களவையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதாவை பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அறிமுகம் செய்த நிலையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இம்மசோதா வழிவகை செய்துள்ளது.

ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர், நரிக்குறவர் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

குருவிக்காரர், நரிக்குறவர்
இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் செப்டம்பர் 14-ஆம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையில் நிறைவேற்றம்
அடுத்தக்கட்டமாக இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும். அதன்பிறகு, தமிழகத்தின் திருத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், அரசின் தற்போதைய நலத் திட்டங்களின் பயன்களை பெற முடியும்.

முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
இந்நிலையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நரிக்குறவர் & குருவிக்காரர் சமூகங்களை எஸ்.டி பட்டியலில் சேர்ப்பதற்காக நான் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

தொடர் முயற்சியின் விளைவாக
எங்களின் தொடர் முயற்சியின் விளைவாக, மக்களவையில் அதற்கான மசோதா குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். அந்தச் சமூகத்தினரின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications