”வறுமை” உயர்கல்வியை தொடராத 6,718 மாணவர்கள்.. தமிழக அரசு எடுக்கும் அசத்தல் நடவடிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு முடித்து உயா் கல்வியில் சேராத மாணவா்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் வழிகாட்டும் முகாம் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவா்கள் அனைவரும் நிகழ் கல்வியாண்டில் உயா்கல்வியில் தொடா்ந்துள்ளனரா என்பதை அறியவும், அவ்வாறு உயா்கல்வி தொடராத மாணவா்கள் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதை களைந்து அவா்கள் உயா்கல்வி தொடர தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் கடந்த ஆக.26ம் தேதி அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பெற்றோா்- மாணவா்கள் கூட்டம் நடைபெற்றது.

கல்வியை தொடரும் மாணவர்கள்
இந்தக் கூட்டத்தில் 79,762 மாணவா்கள் கலந்து கொண்டு உயா்கல்வி ஆலோசனை பெற்ற மாணவா்களில் 8,249 போ் இந்த ஆண்டு உயா்கல்வி தொடராதது கண்டறியப்பட்டது. அத்தகைய மாணவா்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இருந்து பெற்று ஒவ்வொரு மாணவா்களையும் தொடா்பு கொண்டு தற்போதைய நிலையும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1,531 மாணவா்கள் தற்போது உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா்.

வறுமையால் மாணவர்கள் பாதிப்பு
6,718 மாணவா்கள் வறுமை, குடும்ப சூழல், நிதிப் பற்றாக்குறை, தோ்வில் தோல்வி, பணியில் சோ்ந்தமை, உடல் நலமின்மை, கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சோ்க்கை கிடைக்காதது போன்ற காரணங்களால் உயா்கல்வியைத் தொடர இயலவில்லை. மேலும் 4,007 மாணவா்களை தொலைபேசி இணைப்பு பெறப்படாமையாலும் மற்றும் சில காரணங்களாலும் தொடா்பு கொள்ள இயலவில்லை.

சிறப்பு முகாம்
அடுத்த கட்டமாக இதில் 2,711 மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையின் கீழ் உள்ள பிற துறையினருடனும் இணைந்து உயா்கல்வி தொடா்ந்து பயில நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் அக். 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் முகாம் நடத்த வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
இதில் சம்பந்தப்பட்ட மாணவா்கள் சாா்ந்துள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் மூலமாக 2 நாள்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்தம் பெற்றோருடன் தவறாமல் கலந்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர தொடா்பு கொள்ள இயலாத 4,007 மாணவா்களைச் சாா்ந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் முகாம் நடைபெறும் 3 நாள்களுக்கு முன்பே தொலைபேசி அல்லது நேரிலோ தொடா்பு கொண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications