பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு: 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவு
சென்னை: பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டுக்கு தேவைப்படுவதால் பிளஸ் 2 மாணவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களின் கருத்தினை கேட்டறிந்து இந்த முடிவினை தமிழ்நாடு அரசு எடுத்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
இந்த நிலையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டுக்கு தேவைப்படுவதால் பிளஸ் 2 மாணவர்களின், 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்த்து இணையதளத்தில் பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண்களை வருகிற 30-ம் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை மாவட்ட தேர்வுத்துறை இயக்குனரிடமும் வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications