வெளிநாடு செல்பவர்கள் 2-ம் தவணை தடுப்பூசியை எத்தனை நாள் இடைவெளியில் போடலாம்? - ராதாகிருஷ்ணன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 3,10,150 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தது. மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து விமானம் மூலம் வந்து சேர்ந்தது.

சென்னையில் உள்ள மாநில சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

TN Health Secretary Radhakrishnan said those going abroad can be vaccinated with the second dose at 28-day intervals

இதன் பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 1.26 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளதன. இதில் 1.17 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாடுக்கு தீர்வு காணப்படும்.

தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளுக்கு படிக்க மற்றும் வேலைக்காக செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முன்னுரிமை அளிக்கப்படும். அவர்கள் உரிய ஆவணங்களுடன் கோவின் செயலியில் பதிவு செய்து, 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+