'எழுத்துப் பிழை' - கள்ள ஓட்டு சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
சென்னை: கள்ள ஓட்டு சர்ச்சை எழுத்துப்பிழை தான் குழப்பத்துக்கு காரணம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் சென்னை அண்ணாநகரில் தனது வாக்கை செலுத்தினார்.
எல்.முருகன் வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதையடுத்து, அவரது வாக்கை யாரும் செலுத்தவில்லை என மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

எல்.முருகன்
இந்நிலையில், கள்ளஓட்டு சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ''எழுத்துப் பிழை காரணமாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். வேறு யாரும் என் ஓட்டை போடவில்லை'' என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். சர்ச்சைகள் முடிந்தாலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறார்.

அண்ணாமலை
''மத்திய அமைச்சர் முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?'' என கேள்வி அண்ணாமலை கேள்வி எழுப்பினார். இதனால் சென்னையில் அவர் வாக்களிக்கவிருந்த வாக்குச்சாவடியில் பதற்றம் ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம்
இதையடுத்து தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்தது. அதில், ''மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரும் செலுத்தவில்லை. சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் மத்திய அமைச்சரின் பெயருடன் சேர்த்து இரு முருகனின் பெயர்கள் உள்ளனர். அதில் ஒரு முருகன் வாக்களித்துவிட்டார். எனவே மத்திய அமைச்சர் எல் முருகன் வாக்களிக்கலாம்'' என மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

விளக்கம்
இதையடுத்து சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்த எல்.முருகன் தனது வாக்கை செலுத்தினார். இதே போல் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன் 26-வது வார்டில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், ''எழுத்துப் பிழை காரணமாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்'' என்று மத்திய அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications