Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தக்காளி,வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைக்க ரூ. 48 கோடி..உழவர்களுக்கு GRAINS இணையதளம்

உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS என்ற இணையதளம் அறிமுகம் செய்யபடும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Tomatoes and onions are available without shortage at Rs. 48 crore GRAINS website for farmers

கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையுடன் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சேலம் , அமராவதி சர்க்கரை ஆலைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட உரம் தயாரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வேளாண் விஞ்ஞானிகள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாடு, ஆடு வளர்ப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் இடுபொருட்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.

385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு உதவி மையங்கள் செயல்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

தக்காளி ஆண்டு முழுவதும் கிடைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு. வெங்காயம் சீராக கிடைக்க ரூ.29 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53,400 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணுயிர் பாசன முறை அறிமுகம் செய்யப்படும்.

தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்கரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மையை சிறப்பை மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ள அவர்களுக்கு பண்ணை சுற்றுலா அழைத்து செல்லப்படும் எனவும் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார். உணவின் அருமையையும், விவசாயத்தின் பெருமையையும் மாணவர்கள் உணர்ந்து கொள்ள இந்த திட்டம் உதவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+