திரிஷாவிற்காக திறந்த விஜய் வீட்டு கதவு.. திருப்பதியிலிருந்து நேராக நீலாங்கரை பங்களா உள்ளே நுழைந்தார்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குள் திரிஷா சென்றுள்ளார். இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் திருப்பதிக்கு சென்றுவிட்டு தற்போது விஜய் வீட்டிற்கு வந்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையில் திரிஷா கலந்து கொண்டார். கோயில் வளாகத்தில் அவர் நடந்து சென்ற போது ரசிகர் ஒருவர், "மேடம், ரிசல்ட்டு பக்கா மனதே" (இன்று ரிசல்ட் பக்காவா நம் பக்கம்தான்) என்று சொன்னார். இதனை கவனித்த திரிஷா பதிலுக்கு புன்னகைத்துவிட்டு சென்றார்.

நடிகை திரிஷா இன்று (மே 4) தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, அவர் நேற்று இரவு திருப்பதிக்கு சென்று இன்று காலை ஏழுமலையானைத் தரிசனம் செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே நாளில் அவர் சாமி தரிசனம் செய்தது, தவெகவின் வெற்றிக்காகவே இருக்குமோ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நீலாங்கரை இல்லம் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள்
தவெக தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லம் தற்போது கட்சித் தொண்டர்களால் சூழப்பட்டு ஒரு மாநாடு நடக்கும் இடத்தைப் போலக் காட்சியளிக்கிறது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ரேஞ்ச் ரோவர் காரில் வந்த நடிகை திரிஷா, விஜய்யின் வீட்டுக்குள்ளே சென்றுள்ளார். ஏற்கனவே விஜய் மற்றும் திரிஷா குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், இவர்களின் பெயர்கள் தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளன.
தவெக சுமார் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், விஜய்யின் இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தல் முடிவுகள் விஜய்க்குச் சாதகமாக அமையும் பட்சத்தில், திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications