குதிரையையும் விடாத உதயநிதி ஸ்டாலின்.. வியந்துபோன சேப்பாக்கம்.. மனசார வாழ்த்தும் 85 குடும்பங்கள்!
சென்னை: மெரினா கடற்கரை என்று சொன்னாலே, முதலில் நினைவுக்கு வருவது, சவாரி குதிரைகள்தான். தேசிங்கு ராஜா மாதிரி ஏறி உட்கார்ந்தாலும், அது வழக்கமாக போகும் தூரத்திற்கு போய் திரும்பி ஏறிய இடத்திற்கே கொண்டு வந்து விட்டு விடும்.
குதிரையின் வனப்பையும், கம்பீரத்தையும் கவனிக்கும் பலரும், அந்த குதிரையை பராமரிப்பவர்கள் படும் கஷ்டம் பற்றி அறிவதில்லை. அதிலும், ஊரடங்கு காலகட்டங்களில் குதிரையை ஓட்டி சம்பாதிப்பவர்கள் நிலைமையும் யோசிப்பதில்லை.
ஆனால், உதயநிதி ஸ்டாலின் குதிரை சவாரி தொழில் செய்வோருக்கும், அந்த குதிரைகளுக்கும் சேர்த்து நல்லது செய்து வருகிறார்.

சுழன்று வரும் உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவான நாள் முதல் பம்பரமாக தொகுதிக்குள் சுற்றி சுழன்று வருகிறார் உதயநிதி. ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நலத் திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். இதனால் மக்களிடையே குறுகிய காலத்தில் நல்ல பெயரை ஈட்டியுள்ளார்.

குதிரைகளுக்கு தடுப்பூசி
அத்தோடு விடவில்லை உதயநிதி. மெரினா பீச்சில், பயன்படுத்தப்படும், 85 சவாரி குதிரைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இந்த முகாம், சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. குதிரைகளுக்கு தேவையான உணவு பொருட்களை உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளார் உதயநிதி.

85 குடும்பங்கள்
ஊரடங்கு காலத்தில் வருமானத்திற்கு வழியில்லாததால், குதிரைக்கு தீவனம் வைக்கவும் அதன் உரிமையாளர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். குதிரைகள் பசித்திருப்பதை அறிந்து அதன் பசியாற்ற உணவு பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார். மேலும், தடுப்பூசிகளை செலுத்த ஏற்பாடுகள் செய்துள்ளார். 85 சவாரி குதிரை குடும்பங்கள்தான் என்றாலும் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதில்லை உதயநிதி. கடந்த ஜூன் மாதம் இப்படித்தான் அந்த குடும்பங்களைத் தேடிச் சென்று, உணவுப் பொருட்களை வழங்கினார்.

உணவு வழங்கினார் உதயநிதி
அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை மெரினாவில் குதிரை சவாரி தொழில் செய்பவர்களின் 85 குதிரைகள் ஊரடங்கில் உணவின்றி தவிப்பதாக மாலா என்பவர் தந்த தகவலின்பேரில், கால்நடைத்துறையிலிருந்து குதிரைகளுக்கு தேவையான உணவுகளை வர வைத்தார் உதயநிதி. இப்போது உணவோடு சேர்த்து தடுப்பூசி போடும் ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

குதிரைகளையும் விடவில்லை
மக்களை மட்டும்லல, வாயில்லா ஜீவன்களான குதிரைகளையும் விட்டு வைக்காமல் நல்லது செய்துள்ளார் உதயநிதி என்று பாராட்டு தெரிவிக்கிறார்கள், தொகுதி மக்களும், திமுக கட்சிக்காரர்களும்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications