விழா கோலம் பூண்ட நேரு ஸ்டேடியம்! ஆனாலும் ஒலிக்காத ஜோசப் விஜய் எனும் நான்? திரைமறைவில் நடப்பது என்ன?
சென்னை: தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு இதுவரை ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகர் அழைக்காத நிலையில் இன்று பதவியேற்பு விழா நடைபெறாது என்றே தெரிகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திங்கள்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக இருக்கும் சூழலில், அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க 12 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக தவெக காங்கிரஸ் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது ஆதரவை பெற்றது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியிடம் 5 எம்எல்ஏக்கள் இருப்பதால் இப்போதைக்கு தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக 6 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. எனினும் 112 பேரின் ஆதரவுடன் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் பெரும்பான்மைக்கு 2 வாரம் கால அவகாசம் அளிக்குமாறும் விஜய் கோரியிருந்தார்.
இதற்காக சென்னை பனையூர் அலுவலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு வந்த விஜய், ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல் குமார், வெங்கட்ரமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த நிலையில் விஜய் இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைப்பார் ஆளுநர் அர்லேகர். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 2 நாட்கள் மட்டுமே ஆளுநர் அவகாசம் வழங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த பதவியேற்பு விழாவுக்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரிய நிலையில் அவரை இதுவரை ஆளுநர் அர்லேகர் அழைக்கவில்லை.
மேலும் அவருக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்களும் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. ஆளுநரும் இன்று கேரளாவுக்கு திரும்பிச் செல்கிறார். இதனால் இன்றைய தினம் பதவியேற்பு விழா நடைபெறாது என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications