ஆமா.. சென்னை மாநகராட்சியில் முழு ரிசல்ட் எப்போது தெரியும்? ககன்தீப் சிங் கொடுத்த அப்டேட்
சென்னை மாநகராட்சியில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அமைதியாக நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
சென்னை: 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். பிற்பகலுக்குள் ரிசல்ட் அறிவிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12, 601 பதவிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என 268 இடங்கள் வாக்கு எண்ணும் மையங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு, பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. பாரதி மகளிர் கல்லூரி மண்டலம் 5 வாக்குப்பதிவு எண்ணும் மையத்தை பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வாக்குப்பதிவுகள் சரியாக எட்டு மணிக்கு தொடங்கி விட்டது. தபால் வாக்குப் பெட்டிகளும் , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்த கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் திறக்கப்பட்டு வார்டு வாரியாக எண்ணப்பட்டு வருகின்றன.
மின்னணு வாக்கு இயந்திரம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஏஜென்டுகள் முன்னிலையில் 14 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகிறது . கணினி வாயிலாக அவை உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எல்லா இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடத்தப்பட்டு வருகிறது.
வேட்பாளர் அல்லது வேட்பாளரின் தலைமை ஏஜெண்ட் தேர்தல் அலுவலரின் அருகில் அமர்ந்து வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது . இரண்டு , மூன்று சுற்றுகளில் வெற்றி நிலவரம் என்பது தெரிய வந்துவிடும். நண்பகல் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications