எங்களுக்கு அட்வைஸ் பண்ற வேலை வேண்டாம்! ஒப்பந்ததாரர்களிடம் கடுகடுத்த அமைச்சர் கே.என்.நேரு!
சென்னை: எங்களுக்கு அறிவுரை சொல்கின்ற வேலை எல்லாம் வேண்டாம் என ஒப்பந்ததாரர்களிடம் கடுகடுத்துள்ளார் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் மேற்கொள்ள வேண்டிய கட்டுமானப் பணிக்கு மத்திய அரசு 3 ஆண்டுகளாக ஒப்புதல் வழங்காததால் சென்னைக்கு வர வேண்டிய நீர் வராமல் இருப்பதாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற தேசியளவிலான கருத்தரங்கம் ஒன்றில் கலந்துக் கொண்ட அவர் இதனைக் கூறினார்.

குடிநீர் வழங்கல்
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான தேசிய கருத்தரங்கம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மத்திய அரசை ஒரு பிடி பிடித்தார். செம்பரம்பாக்கம் ஏரியில் கட்டுமானப் பணி மேற்கொள்ள மத்திய அரசு 3 ஆண்டுகளாக அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் கோபம்
இதனால் சென்னைக்கு வர வேண்டிய 250 டிஎம்சி தண்ணீர் வீணாவதாகவும் எனவே கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முறையான திட்டத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனிடையே அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஒப்பந்ததாரர் ஒருவர் மைக்கை பிடித்து அதிகாரிகளுக்கு ஒரு சில ஆலோசனைகளை வழங்கினார். இதைக் கேட்ட அமைச்சர் நேருவின் முகம் கோபத்தில் சிவந்தது.

அட்வைஸ் வேண்டாம்
இதையடுத்து எங்களுக்கு அறிவுரை சொல்கின்ற வேலை எல்லாம் வேண்டாம் என ஒப்பந்ததாரர்களிடம் கடுகடுத்த அமைச்சர் நேரு, கருத்து மட்டும் சொல்லச்சொன்னால் எங்களுக்கு அட்வைஸ் செய்கிறீர்களா என எகிறினார். ஒப்பந்த வேலைகளை விரைந்து முடிப்பதற்கான வழியை பார்க்குமாறும் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் போது உள்ள பிரச்சனைகள், சிரமங்களை மட்டும் கூறுமாறும் ஒப்பந்ததாரர்களிடம் கூறினார் அமைச்சர் நேரு.

ஒப்பந்ததாரர்கள்
அமைச்சர் நேரு கடுகடுப்புடன் பேசியதை பார்த்து அதிகாரிகளுக்கு அறிவுரை சொன்ன ஒப்பந்ததாரர் ஆடி போய்விட்டார். இதனிடையே மற்ற ஒப்பந்ததாரர்கள் யாரும் கருத்துச் சொல்லக் கூட விரும்பாமல் கடைசி வரை அமைதியாக அமர்ந்துவிட்டு கலைந்து சென்றனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications