வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. மழை வெளுக்கும்
சென்னை: தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளாவிற்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.
நேற்றும் கூட கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்தது.
முக்கியமாக காவிரி கரையோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று கொஞ்சம் மழை குறைந்த நிலையில், இன்று மீண்டும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை காரணம்
வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது ஒடிசா கடல் பகுதி அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி மேலும் வலிமை அடையும். கடலில் இருந்து 7.6 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதனால் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிகம் மழை பெறும். மேற்கு வங்கத்தில் தீவிர கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் அலர்ட்
அதே சமயம் தமிழ்நாட்டிற்கும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளாவிற்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவிற்கு தீவிர கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் பல மாவட்டங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது .

கடல்
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று இடி, மின்னல் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இது போக மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த சுழற்சி காரணமாக அரபிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு
சென்னை தமிழ்நாட்டில் இயல்பை விட கடந்த ஒரு மாதத்தில் 94 சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளது. கடந்த ஜூன் 1 முதல் நேற்று வரை தமிழ்நாட்டில் 26 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. முக்கியமாக மழை காரணமாக ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications