புயலா? வங்கக்கடலில் 2 நாட்களில் உருவாகிறது புதிய தாழ்வுப்பகுதி! தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? ரிப்போர்ட்
சென்னை: வங்கக்கடலில் ஆகஸ்ட் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலையில் இருந்து பல்வேறு தென் மாவட்டங்களிலும் சில வட மாவட்டங்களிலும் இன்று மழை பெய்தது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நேற்று நாள் முழுக்க ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலடுக்கு சுழற்சி
தற்போது வங்க கடலில் மேற்கு மத்திய பகுதியிலும், ஆந்திர கடல் பகுதிக்கு அருகிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் பாகிஸ்தான், குஜராத் இடையே அரபிக்கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது 3.5 கிலோ மீட்டர் உயரத்தில் கடல் மட்டத்தில் இருந்து காணப்படுகிறது. ராஜஸ்தான் அருகிலும் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

பல மாநிலங்கள்
தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா என்று பல மாநிலங்களில் விடாமல் மழை பெய்வதற்கு இதுவே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சிதான் மழையின் தீவிரத்தை அதிகப்படுத்தி உள்ளது. ராஜஸ்தான், குஜராத் பகுதி, கடலோர & தெற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை தீவிரம் அடையும். மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் , சிக்கிம், ஒடிசா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் , திரிபுரா, குஜராத் பகுதி, மராத்வாடா, விதர்பா மற்றும் ராயலசீமா பகுதிகளில் வரும் வாரம் முழுக்க கனமழை பெய்யும், என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, கேரளாவில் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலா?
ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா அல்லது புயலாக மாறுமா என்று வானிலை ஆய்வு மையம் கூறவில்லை. தொடக்க காலம் என்பதால் 2-3 நாட்கள் கழித்துதான் இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்று கணிக்க முடியும். இந்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் 60 கிமீ இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உள்மாவட்டங்களிலும் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications