புயலா? வங்கக்கடலில் 2 நாட்களில் உருவாகிறது புதிய தாழ்வுப்பகுதி! தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? ரிப்போர்ட்
சென்னை: வங்கக்கடலில் ஆகஸ்ட் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலையில் இருந்து பல்வேறு தென் மாவட்டங்களிலும் சில வட மாவட்டங்களிலும் இன்று மழை பெய்தது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நேற்று நாள் முழுக்க ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலடுக்கு சுழற்சி
தற்போது வங்க கடலில் மேற்கு மத்திய பகுதியிலும், ஆந்திர கடல் பகுதிக்கு அருகிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் பாகிஸ்தான், குஜராத் இடையே அரபிக்கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது 3.5 கிலோ மீட்டர் உயரத்தில் கடல் மட்டத்தில் இருந்து காணப்படுகிறது. ராஜஸ்தான் அருகிலும் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

பல மாநிலங்கள்
தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா என்று பல மாநிலங்களில் விடாமல் மழை பெய்வதற்கு இதுவே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சிதான் மழையின் தீவிரத்தை அதிகப்படுத்தி உள்ளது. ராஜஸ்தான், குஜராத் பகுதி, கடலோர & தெற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை தீவிரம் அடையும். மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் , சிக்கிம், ஒடிசா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் , திரிபுரா, குஜராத் பகுதி, மராத்வாடா, விதர்பா மற்றும் ராயலசீமா பகுதிகளில் வரும் வாரம் முழுக்க கனமழை பெய்யும், என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, கேரளாவில் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலா?
ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா அல்லது புயலாக மாறுமா என்று வானிலை ஆய்வு மையம் கூறவில்லை. தொடக்க காலம் என்பதால் 2-3 நாட்கள் கழித்துதான் இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்று கணிக்க முடியும். இந்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் 60 கிமீ இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உள்மாவட்டங்களிலும் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications