அங்கே உட்காரணும்பா! அருகே சென்ற "திருமா" தாயார்.. சட்டென ஸ்டாலின் தந்த "ரியாக்சன்".. நெகிழ்ச்சி!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழாவில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
விசிக தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
விசிக - திமுக உறவு, திமுக கூட்டணி, திருமா திருமணம் செய்து கொள்ளாதது என்று பல விஷயங்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்த நிகழ்வின் போது சுவாரசியமான சம்பவம் ஒன்றும் நடைபெற்றது. அதன்படி மேடையில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து இருந்தார்.

என்ன நடந்தது
அவருக்கு அருகில் திருமாவளவன் அமர்ந்து இருந்தார். அதற்கு அடுத்தபடியாக திருமாவளவனின் தாயார் பெரியம்மாள் அமர்ந்து இருந்தார். திருமாவும் - ஸ்டாலினும் மேடையிலேயே சில நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர். இதை திருமாவளவனின் தாயார் பெரியம்மாள் பார்த்து கொண்டே இருந்தார். இவர்களை ரசித்தபடி இருந்தார். அதன்பின் திருமாவின் காதுகளில் பெரியம்மாள் எதோ கிசுகிசுத்தார். பின்னர் கையை காட்டி நான் அங்கே உட்காரணும்பா என்பது போல பேசினார்.

சந்திப்பு
இதையடுத்து உடனே திருமா முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு இடம் மாறி அமர்ந்தார். பெரியம்மாள் முதல்வர் ஸ்டாலின் அருகே சென்று அமர்ந்தார். இது மேடையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பெரியம்மாள் தனக்கு அருகே அமர்ந்ததும் ஸ்டாலின் சிரித்தபடி அவரிடம் பேசினார். திருமா அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு.. எப்படி இருக்கீங்க என்று விசாரித்தார். அவரும் பதிலுக்கு முதல்வர் ஸ்டாலினை மிகவும் பாசமாக விசாரித்தார்.

விசாரித்தார்
மேடையில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில்தான் சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் திருமாவளவனின் தாயார் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இது தொடர்பாக ட்விட் செய்திருந்த திருமா, எண்பதை நெருங்கும் வயது. திடீரென அம்மாவுக்கு நெஞ்சுவலி. ஓரிரு நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது. அம்மாவை அவசரமாக திருச்சிக்கு அழைத்துச் சென்றபோதுதான் தகவலறிந்து சென்னைக்கு அழைத்து வர செய்தேன்.

உடல்நிலை
ஜூன் 22 மாலை நடந்த ஆஞ்சியோ சோதனையில்தான் அவருக்கிருந்த ஆபத்து தெரியவந்தது. இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்ததைக் கண்டறிந்து ஓரிடத்தில் மட்டும் அடைப்பு நீக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டம் அமைவதற்கு ஏதுவாக 'ஸ்டென்ட்' எனும் ஒன்றைப் பொருத்தியுள்ளனர். இது அறுவை சிகிச்சை அல்ல. ஆனாலும் இது ஒரு சவாலான மருத்துவப் பணி. மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது, என்று குறிப்பிட்டுட்டார் .

திருமாவளவன்
இதையடுத்து அதே நாள் திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் போன் செய்து பேசினார், அதில், அம்மா எப்படி இருக்காங்க.. எதுவும் உதவி வேண்டுமா என்று கேட்டுள்ளார். சுமார் 5 நிமிடங்கள் இவர்கள் பேசி உள்ளனர். முதல்வரின் விசாரிப்பை கேட்டு போனிலேயே திருமா நெகிழ்ச்சி அடைந்துள்ளார். உங்களின் அன்பான விசாரிப்பிற்கு நன்றி என்று போனிலேயே முதல்வருக்கு திருமா நன்றியும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகம் + புதுச்சேரி.. 10 தொகுதிகள் ஒதுக்குங்க.. ஸ்டாலினை வீட்டில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை! -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
திருப்போரூர் தொகுதியில் நிற்க போவது யார்? யார் யாருக்கு அதிக வாய்ப்பு? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications