ரொம்ப நல்லாருக்கே.. எடப்பாடி மனசை குளிர வைத்த "பெஞ்சமின்".. 70% ஓவர் ஓவர்.. திகைத்து பார்த்த ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாளை காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு நடக்க உள்ளது.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுமார் 5 மணி நேரம் மொத்தமாக இந்த வழக்கின் விசாரணை ஒற்றை நீதிபதி முன்பாக நடைபெற்றது. இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான மனுவில் நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

தீர்ப்பு

தீர்ப்பு

தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு நடக்கும். இருந்தாலும் அதிமுக பொதுக்குழுவிற்கு தீவிரமான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்து வருகிறது. அதிமுக பொதுக்குழு கடந்த முறை போலவே இந்த முறையும் வானகரத்தில் நடக்க உள்ளது. ஆனால் இந்த முறை வானகரத்தில் ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடக்காமல் மண்டபம் இருக்கும் பகுதியில் வெளியே டென்ட் போட்டு, பெரிய பந்தல் போட்டு பொதுக்குழுவை நடத்த உள்ளனர்.

 ஏற்பாடு

ஏற்பாடு

இதற்காக 30 ஆயிரம் சதுர அடியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 1200 பேர் சாப்பிடும் வகையில் உணவு பந்தல் போடப்பட்டுள்ளது. மேலே மேடை 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கீழே உறுப்பினர்கள் அமரும் பகுதி 2 அடி உயரத்திற்கு இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

70% ஓவர்

70% ஓவர்

நாளை பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் நேற்று மாலை வரை 70 சதவிகித ஏற்பாடுகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள ஏற்பாடுகள் இன்று முடியும் என்று கூறப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தையும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்தான் மேற்கொண்டார். மற்ற மாஜி அமைச்சர்கள் வந்து பார்வையிட்டாலும், பெஞ்சமின்தான் பணிகளை நேரில் பார்வையிட்டு இருக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு இது தொடர்பான வீடியோக்கள் போட்டு காட்டப்பட்டுள்ளன.

 எடப்பாடி

எடப்பாடி

எடப்பாடி இந்த பணிகளை நேரில் பார்வையிடவில்லை. ஆனால் அவர் ஏற்பாடுகளை போனில் வீடியோவாக பார்த்து இருக்கிறார். கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்து உள்ளனர். வெள்ளை - பச்சை நிறத்தில் மழை நீர் புகாத வகையில் பந்தல் போட்டுள்ளனர். எடப்பாடி - எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் மட்டும் அடங்கிய மிகப்பெரிய பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

தோரணம்

தோரணம்

அதாவது இவர்களின் உருவம் மட்டும் இரண்டு பக்கமும் இருக்கும் வகையில் பொதுக்குழுவிற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளை பார்த்து எடப்பாடி பழனிசாமி அதை வியந்து பாராட்டியதாக கூறப்படுகிறது. ஏற்பாடுகள் எல்லாம் நல்லா இருக்கே.. மேடை பெரிதாக அமைக்கப்பட்டு இருக்கிறதே என்று எடப்பாடி பெஞ்சமினை பாராட்டியதாக கூறப்படுகிறது. பொதுக்குழுவிற்காக இந்த முறை பெரிதாக வெள்ளை பந்தல் போட்டு மேடை அமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

பொதுக்குழுவிற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு நம்பிக்கையாக பணிகளை செய்து வருகிறதாம். ஆனால் ஓபிஎஸ் தரப்போ பொதுக்குழு நடக்காது என்ற நம்பிக்கையில் இப்போதும் இருக்கிறதாம். எப்படியும் பொதுக்குழுவை நடத்த விட மாட்டோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம். ஹைகோர்ட் தீர்ப்பு இன்னும் வராத நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக பொதுக்குழுவிற்கு தயாராகி வருவது ஓபிஎஸ் தரப்பை அதிர வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+