இது திராவிட நாடா? ஏன் தமிழா இப்படி இருக்கீங்க? இயக்குனர் பேரரசுக்கு வந்ததே கோபம்! சுளீர் கேள்வி
சென்னை: தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றபோது வரும் கோபம், திராவிடநாடு எனும்போதும் தமிழனை திராவிடன் எனும்போதும் ஏன் வரவில்லை தமிழா? என திரைப்பட இயக்குனரும், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணை தலைவருமான பேரரசு ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக சார்பில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பாராட்டினார். இந்த நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி பேசினார். அப்போது தமிழ்நாடு பற்றி பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டை தமிழகம் என கூறுவதே சரியாக இருக்கும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு
இதுபற்றி ஆளுநர் ஆர்என் ரவி பேசுகையில், ‛‛பிரதமர் மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. அனைவருக்கும் பாராட்டுகள் விடுதலை போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடையே இருந்தன. இப்போது நமது நாடு ஒரே பாரதம். இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்'' என பேசினார்.

சர்ச்சையான ஆளுநர் பேச்சு
தமிழ்நாட்டை தமிழகம் என சொல்வதே சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்என் ரவி பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் பாஜகவினர் ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. பல்வேறு தலைவர்கள் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநருக்கு ஆதரவாக வந்த பேரரசு
இந்நிலையில் தான் திரைப்பட இயக்குனரும், பாஜகவின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக செயல்பட்டு வருபவருமான பேரரசு ட்விட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் தமிழ்நாட்டை திராவிட நாடு, தமிழனை, திராவிடன் என அழைக்கும்போது ஏன் எதிர்ப்பது இல்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இதன்மூலம் ஆளுநர் ஆர்என் ரவிக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் கூறியது என்ன?
இதுபற்றிபேரரசு, தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றபோது வருகின்ற கோபம், தமிழ்நாட்டை திராவிட நாடு என்றபோது, தமிழனை திரவிடன் என்றபோது, நம் தமிழக முதல்வர் தமிழ்நாடு மாடல் அல்லது தமிழ் மாடல் என்று செல்லாமல் திரவிட மாடல் என்று சென்னபோது ஏன் தமிழா இந்த கோபம் வரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி?












Click it and Unblock the Notifications