இலவச மின்சாரத்துக்கு சிக்கல்? ரூ.20 ஆயிரம் கோடி ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவது ஏன்?
சென்னை: தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மின் நுகர்வோர்களின் வீடுகளிலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட, ஆளில்லா ஸ்மார்ட் மீட்டர் திட்டம் முற்றிலும் கைவிடப்படுவதாக வெளியாகியிருக்கும் அதிரடி தகவல், ஒட்டுமொத்த மாநிலத்திலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது... தமிழக அரசுக்கு வரவிருக்கும் மாபெரும் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், முறைகேடு புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுப்பதற்காகத் இப்போது சாதாரண மீட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.. இதில் சில மின்வாரிய பணியாளர்கள் நுகர்வோரின் வீடுகளுக்கு நேரில் செல்லாமல், தோராயமாக கணக்கெழுதி செல்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனால் பொதுமக்கள் தேவையற்ற கூடுதல் மின்கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த டெக்னிகல் குறைபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மனித தவறுகள் எதுவுமில்லாமல் துல்லியமாக மின்சாரத்தை கணக்கிடவும் மின் வாரியம் ஒரு நவீனத் திட்டத்தைக் கையில் எடுத்தது.
கரண்ட் பில் மீட்டர்கள்
அதன்படி வீடுகளில் ஆளில்லாமலேயே மின் பயன்பாட்டை தானாக கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர்-களை பொருத்த மின் வாரியம் முடிவு செய்தது. இந்த ஸ்மார்ட் மீட்டர்களில் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட வேண்டிய தேதி, பிரத்யேக சாப்ட்வேரில் அப்லோடு செய்யப்பட்டுவிடும்..
மேம்பட்ட தொலைத்தொடர்பு வசதி மூலமாக, குறிப்பிட்ட தேதியில் இந்த மீட்டர் தானாகவே மின் பயன்பாட்டைப் பதிவு செய்து, நுகர்வோரின் செல்போன் நம்பருக்கு மின்கட்டண விவரங்களை அனுப்பிவிடும் வகையில் இந்த திட்டம் டிசைன் செய்யப்பட்டிருந்தது.
ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம்
இதற்காக மாநிலம் முழுவதும் 6 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, சுமார் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தவும், அவற்றை அடுத்த 93 மாதங்களுக்கு தொய்வின்றி பராமரிக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்கான தகுதியான ஒப்பந்த நிறுவனத்தைத் தேர்வு செய்ய, கடந்த 2025 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாபெரும் டெண்டரும் கோரப்பட்டது. ஒட்டுமொத்தமாக 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மெகா திட்டம் செயல்படுத்தப்படவிருந்தது.
இந்த பிரம்மாண்ட டெண்டரில் பங்கேற்க முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டன... இறுதி கட்டத்தில் சுமார் 50 நிறுவனங்கள் இதில் பங்கேற்ற நிலையில், அவை சமர்ப்பித்த தொழில்நுட்பப் புள்ளிகள் அந்த ஆண்டின் இறுதியிலேயே திறக்கப்பட்டுவிட்டன. இந்த தொழில்நுட்ப விவரங்கள் அனைத்தும் மின்வாரியத்தால் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த கட்டமாக விலைப்புள்ளியைத் திறப்பதற்கான அனுமதி கோரி அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
கைவிடப்படுகிறதா ஸ்மார்ட் மீட்டர் திட்டம்
இருந்தாலும் அப்போது நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகே விலைப்புள்ளியை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார்.
புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மின் வாரியத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறின. முக்கியமாக பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததன் காரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்த 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பல்வேறு டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.
200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம்
அதன் தொடர்ச்சியாக, புதிய அரசு வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதால், அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டு, மின் வாரியத்தின் நிதிப் சுமை கணிசமாக உயர்ந்துள்ளது.
அதனால் இந்த இக்கட்டான நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், தேவையற்ற பெரும் செலவுகளைத் தவிர்க்கவும், இப்போதைய சூழலில் இந்த 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முற்றிலும் கைவிடுவது என்ற அதிரடி முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. தொழில்நுட்ப புரட்சியாக பார்க்கப்பட்ட ஒரு திட்டம், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நிதி நெருக்கடியால் முடக்கப்பட்டுள்ளது மின் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...!!!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications