வங்கியில் தங்க நகை பறிபோகுமா.. ரிசர்வ் வங்கி உத்தரவுக்கு நடுவில் உள்ள இரண்டு வழிகள்
சென்னை: தங்கம் வாங்கி வைத்திருந்த அத்தனை பேருக்கும் ஜாக்பாட் போல் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துவிட்டது. அதனால் மகிழ்ச்சி அடைந்தாலும், தங்க நகைகளை அவசரத்திற்கு அடகு வைத்தால் நகையையே இழக்க வேண்டியது வருமோ என்று தவிப்பில் இருக்கிறார்கள் மக்கள். ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவிற்கு நடுவில் உள்ள இரண்டு வழிகளை இப்போது பார்ப்போம்.
ரிசர்வ் வங்கியின் உத்தரவு காரணமாக தங்க நகையை அடகு வைத்த பலர் மொத்தமாக அசல் மட்டும் வட்டியை கட்டி நகையை திருப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படி கட்ட முடியாதவர்கள் நகையை மறந்துவிட வேண்டும் என்கிற நிலை உருவாகி உள்ளது. தங்க நகை இருக்கிறது என்று நினைத்து வங்கியில் போய் அடகு வைத்துவிட வேண்டாம். ஏனெனில் ரூல்ஸ் மொத்தமாக மாறிவிட்டது.

தங்க நகையை அடகு வைப்பவர்கள் தனிநபர் கடன் பாணியில் மாதம் மாதம் இஎம்ஐயில் வட்டி மற்றும் அசல் தொகையை கட்ட முடியும். இரண்டாவதாக தங்க நகைக்கு மாதம் மாதம் வட்டி மட்டும் கட்டி வந்து இறுதியில் அசலை கட்டி நகையை திருப்ப முடியும். 3வதாக புல்லட் ரீபேமெண்ட் என்று அழைக்கப்படும் திட்டம் ஆகும். இதன்படி அசல் மற்றும் வட்டியை ஆண்டு இறுதியில் மொத்தமாக கட்ட வேண்டும்.. 4வது முறை என்றால், ஓவர் டிராப்ட் என்று அழைக்கப்படும் முறையாகும்.
இதில் நகை அடகு மதிப்பு 3 லட்சம் ஆக இருக்கும். அப்படி கடன்வாங்கினாலும் அதில் குறைந்த பணத்தை மட்டும் வாங்கி கொண்டு மீதியை வாங்காமல் அப்படியே வங்கி கணக்கில் வைத்திருப்பார்கள்.. இப்படி நான்கு விதமாக நகைக்கடனை வாங்கி வருகிறார்கள் மக்கள். இதில் பலரும் புல்லட் ரீ பேமெண்ட் முறையில் தான் நகைக்கு வட்டி கட்டுவார்கள். ஒருவேளை நகைக்கான அசல் வட்டியை கட்ட முடியாவிட்டாலும், வட்டியை மட்டும் கட்டிவிட்டு மறு அடமானம் வைத்து அடுத்த ஆண்டில் அசலை வட்டியை கட்டி நகையை மீட்பார்கள். இப்போது அந்த வழியை நிரந்தரமாக ரிசர்வ் வங்கி அடைத்துவிட்டது.
தற்போதைய நிலையில் நண்பர்கள் நகையை அடகு வைக்க போகிறார்கள் என்றால், ஒரு நாள் முன்பு நீங்கள் அவரிடம் நகையை வாங்கி அடகு வைத்து பணத்தை எடுத்து அந்த பணத்தில் உங்கள் நகையை திருப்பலாம். மீண்டும் மறு நாள் அடகு வைத்து அந்த பணத்தை உங்கள் நண்பருக்கு கொடுத்துவிடலாம். இப்படி உறவினர்கள், நண்பர்களுக்குள் கைமாற்றாக கடன் வாங்கித்தான் மாற்ற வேண்டும்.
இல்லை என்றால் கந்துவட்டிக்கு விடுகிறார்கள் அல்லவா.. அவர்களிடம் தான் பணத்தை வாங்கி நகையை மீட்டு மறுநாள் மீண்டும் அடகு வைக்க வேண்டும். அதற்கு இரண்டு நாள் வேலைக்கு போக முடியாத நிலை ஏற்படுவதுடன், கந்து வட்டிக்கு வாங்குவோரிடம் சில ஆயிரங்களை நீங்கள் தர வேண்டியது வரலாம். எனவே அப்படி ஒரு வேளை நிலை வந்தால், அடுத்த ஆண்டில் இருந்து மாதம் மாதம் வட்டி, அசலை கட்டிட பழகுங்கள். இதுதான் சிறந்த வழி..
அதேநேரம் சில தனியார் வங்கிகள், வட்டியை மட்டும் கட்டிக்கொண்டு மீண்டும் மறு அடகு வைக்க இன்னமும் அனுமதிக்கின்றன. எனவே அப்படி எந்த வங்கிகள் அனுமதிக்கின்றன என்பதை உங்கள் பகுதியில் அறிந்து அங்கு அடகு வைக்கலாம். ஆனால் பொதுத்துறை வங்கியை விட அங்கு சற்று வட்டி அதிகமாக இருக்கும்.
பொதுத்துறை வங்கிகளில் 72 பைசா அல்லது 84 பைசா என்றால் அங்கு 95 பைசா என்கிற அளவில் இருக்கும். விசாரித்து சரி என்றால் மட்டும் நகைகளை அப்படி அடகு வைக்கலாம். அதேநேரம் நகைகளின் மதிப்பு அதிகமாக கடன் வாங்குவதோ அல்லது நகைகளுக்கு மாதம் மாதம் அசல் வட்டி கட்ட முடியாது என்றாலோ அது எப்படி இருந்தாலும் சிக்கலையே ஏற்படுத்தும்.. எனவே அசல் வட்டியை மாதம் மாதம் கட்டும் பழக்கத்திற்கு மாறுவதே நமக்கு நல்லது.












Click it and Unblock the Notifications