Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடே.. கிளைமேட் மாறுதே.. திமுகவிற்கு டெல்லி அனுப்பிய "முதல்" கிரீன்.. ஒரே குஷியாம்! அப்போ அதுதானே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு எடுத்த முக்கியமான முடிவு ஒன்று ஆளும் திமுக தரப்பை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இருந்து திமுகவிற்கு கிடைத்த முக்கியமான கிரீன் சிக்னலாக இது பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வென்றார். தமிழ்நாட்டில் இவரை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன.

இவருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி நிறுத்திய யஷ்வந்த் சின்காவை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன.

ஆனால் திமுக திரௌபதி முர்முவை ஆதரிக்கவில்லை.

 சந்தேகம்

சந்தேகம்

இந்த நிலையில்தான் திரௌபதி முர்மு ஆளும் திமுக அரசு நிறைவேற்றும் மசோதாக்களில் கையெழுத்து போடுவாரா என்ற கேள்வி எழுந்தது. அதாவது தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பி வைப்பார். இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமாக்க வேண்டும். தற்போது ஆளுநர் ஆர். என் ரவியிடம் 10 மசோதாக்கள் வரை நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்கள் இன்னும் டெல்லிக்கு செல்லவில்லை.

டெல்லி

டெல்லி

ஆனால் நீட் மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் சமீபத்தில் டெல்லிக்கு அனுப்பப்பட்டன. கடந்த 3 மாதங்களில் ஒரு சில மசோதாக்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டன. இதில் நீட் மசோதா தவிர மற்ற மசோதாக்கள் பெரும்பாலும் மத்திய அரசை சீண்டாத மசோதாக்கள். இந்த மசோதாக்கள் பெரிய சர்ச்சைகளை கொண்டு இருக்காத மசோதா. இந்த நிலையில்தான் குடியரசுத் தலைவர் முர்மு முக்கியமான மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

என்ன மசோதா

என்ன மசோதா

அதன்படி பதிவுத்துறை சட்ட திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி சட்டமாக்கி உள்ளார். இந்த மசோதா மூலம் மாட்ட சார் பதிவாளர்கள் பதிவுத்துறை தொடர்பான மோதல்களை விசாரணை செய்வார்கள். அதாவது பதிவுத்துறையில் நில தகராறு ஏற்பட்டால் கோர்ட்டுக்கு செல்லாமல் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்களே இந்த மோதல்களை சரி செய்ய முடியும். விசாரிக்க முடியும். இதற்குத்தான் முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

முர்மு

முர்மு

முர்மு எடுத்துள்ள இந்த முடிவால் மற்ற மசோதாக்களுக்கும் அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று ஆளும் திமுக அரசு தரப்பு நம்ப தொடங்கி உள்ளது. டெல்லியில் இருந்து கிடைத்த முதல் கிரீன் சிக்னலாக இது பார்க்கப்படுகிறது. இந்த வருட தொடக்கத்தில் நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. முதலில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் தமிழ்நாடு அரசு இதே மசோதாவை தாக்கல் செய்தது. நீட் விலக்கு மசோதாவை இரண்டாவது முறையாக கேபினெட்டின் ஒப்புதலைப் பெற்று பேரவையிலும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடியரசு தலைவர்

குடியரசு தலைவர்

இப்போது இது குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சட்டத்தை அங்கீகரிக்கவில்லை. தற்போது முர்மு இதை அங்கீகரிப்பார் என்ற சின்ன நம்பிக்கை இதன் மூலம் எழுந்துள்ளது. முர்மு குடியரசுத் தலைவர் ஆன நிலையில் திமுக எம்பிக்கள் அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் திட்டத்தில் உள்ளனர். அதோடு நீட் பற்றியும் அவரிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+