நகர பேருந்துகளில் இலவச பயணம்.. குடும்ப செலவுக்கு கூடுதல் பணம் கிடைக்கிறது.. பெண்கள் உற்சாக வரவேற்பு
சென்னை: தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அரசு நகர சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று முத்தான திட்டத்தை கொண்டு வந்தார்.
தமிழக அரசு அறிவிப்பின்படி இன்று அதிகாலை முதலே அரசு நகர சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசின் இந்த சூப்பர் திட்டம் பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக நாம் சில பெண்களிடம் கருத்துகளை கேட்டறிந்தோம். அவர்கள் கூறியதை கீழே தொடர்ந்து பாருங்கள்.

ஸ்டாலினுக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம் ஆர்த்தி என்ற இளம்பெண் கூறியதாவது:- பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது எங்களுக்கு மிகவும் பயன்மிக்கதாகவும். வேலை பார்க்கும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு இது பயன் மிக்கதாக இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இன்னும் திட்டங்கள் வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம் கண்மணி என்ற இளம்பெண் கூறியதாவது:- பணிபுரியும் பெண்கள், படிக்கும் மாணவிகளுக்கு இந்த திட்டம் கைகொடுக்கிறது. வேலை முடிய எவ்வளவு நேரமாக இருந்தாலும், நகர பேருந்துகள் இருப்பதால் நாங்கள் கட்டணமின்றி வீட்டுக்கு வந்து விடுவோம். பள்ளி, கல்லூரிகள் திறந்தால் கூடுதல் பெண்கள் பயன் பெறுவார்கள். இன்னும் பெண்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும்.

சிலருக்கு தெரியவில்லை
அரசு பஸ் நடத்துனர்கள், டிரைவர்கள் சிலர் கூறுகையில், அரசின் இந்த திட்டம் பெண்களுக்கு ஏற்படும் பயண செலவுத் தொகையை மிச்சப்படுத்தும். அனைத்து பெண்கள் மத்தியிலும் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. சிலர் அரசின் அறிவிப்பு தெரியாமல் எங்களிடம் டிக்கெட்டுக்கு பணம் கொடுப்பார்கள். நாங்கள் அரசின் அறிவிப்பை அவர்களிடம் எடுத்து கூறினோம்.நகர பேருந்துகள் அதிகபட்சம் 35 கி.மீ வரை இயக்கப்படும்.

குடும்ப செலவுக்கு பணம் கிடைக்கிறது
இந்த திட்டம் கிராமங்களில் இருக்கும் பெண் கூலி தொழிலாளர்கள், கர்ப்பிணிகளுக்கு வரப்பிரசாதமாக இருப்பதாகவும் இதன் மூலம் தங்களுக்கு ரூ.50 வரை தினமும் மிச்சமாவதாகவும் புதுக்கோட்டையை சேர்ந்த சில பெண்கள் தெரிவித்தனர். பேருந்து பயணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மீதமாகும் இந்த பணத்தை குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்த முடிகிறது என்று சில பெண்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications