கோவை முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையால் பரபரப்பு
கோவை: கோவை முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
கோவை ராமநாதபுரம் முத்தூட் மினி என்ற நகை அடகு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
நேற்று மாலை பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் அங்கிருந்த இரு பெண் ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

புகார்
பின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி 812 சவரன் நகைகளையும் ரூ 1 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றார். இதுகுறித்து அந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கொள்ளை
புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். பின்னர் பெண் ஊழியர்கள் சொன்னது போல் அவர்களை தாக்கி மிரட்டி கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விசாரணை
இந்த கொள்ளையை தனிநபரான அவர் மட்டும் செய்தாரா இல்லை அவரது கூட்டாளிகள் யாரேனும் கீழே நின்று கொண்டிருந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடகு வைத்தவர்கள்
நேற்று நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தற்போதுதான் தகவல் பரவியுள்ளது. இதையடுத்து நிறுவனத்தில் நகை கொள்ளை என்ற செய்தியை கேட்டு அங்கு நகை அடகு வைத்தவர்கள் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications