10 பேர் கை மாறி வந்த கார்.. ஓனரை கண்டுபிடிச்சாச்சு.. கோவை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட பரபர தகவல்!
கோவை : கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த ஜமேஷா முபின் பயன்படுத்திய கார், சுமார் 10 பேரிடம் கை மாறியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் கைதான 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கைதான 5 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் கூட்டுச்சதி செய்தது, இரு பிரிவினர் இடையே மோதல் உண்டாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் பலியானார். முதலில் இச்சம்பவம் விபத்து எனக் கருதப்பட்ட நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, ஜமேஷா முபீனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கு உதவும் பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், அலுமினியம் பவுடர், சார்க்கோல் உள்ளிட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

5 பேர் கைது
ஜமேஷா முபின் வீட்டின் முன் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சனிக்கிழமை நள்ளிரவு 11.25 மணிக்கு ஜமேசா முபீனுடன் 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து மர்ம பொருள் ஒன்றை அவர்கள் ஐந்து பேரும் தூக்கிச் சென்றதும் பதிவாகி இருந்தது. கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை காவல் ஆணையர்
இந்நிலையில், கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக இதுவரை 5 பேரை கைது செய்துள்ளோம். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

22 பேரிடம் விசாரணை
உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 22 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். வெடி பொருட்களைப் பயன்படுத்தி சிலிண்டர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதால் ஊபா சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊபா சட்டத்தில்
இந்த விவகாரத்தில் கைதான 5 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் சதி செய்தது, இரு பிரிவினர் இடையே மோதல் உண்டாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சிலரை, என்.ஐ.ஏ விசாரித்துள்ளது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

10 கைகள் மாறி
சிலிண்டர் வெடித்த கார், 10 கைகள் மாறி வந்திருக்கிறது. சுமார் 10 பேரிடம் கார் கைமாறிய நிலையிலும் காரின் உரிமையாளரை கண்டுபிடித்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்கள் மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். யூகங்கள் அடிப்படையில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன." எனத் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்












Click it and Unblock the Notifications