ஈஷா யோகா மையத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர எதிர்ப்பு- பெரியார் தி.க. நூதன போராட்டம்
கோவை ஈஷா மையத்துக்கு ஜனாதிபதி வர எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திகவினர் போராட்டம் நடத்தினர்.
கோவை: சட்டவிரோதமான ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் தி.க.வினர் போராட்டம் நடத்தினர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக நாளை தமிழ்நாடு வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை வழிபடுகிறார் திரவுபதி முர்மு. மதுரையைத் தொடர்ந்து கோவை வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை ஈஷா யோகா மையம், அரசு விருந்தினர் மாளிகை, கோவை சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. மேலும் இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து வாகன ஒத்திகையும் இன்று நடைபெற உள்ளது. கோவையில் சனிக்கிழமை இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி தங்குகிறார்.

இதனிடையே கோவை ஈஷா மையத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர எதிர்ப்பு தெரிவித்து கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் தி.க.வினர் நேற்று கோவையில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக தந்தை பெரியார் தி.க. நிர்வாகிகள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலையை, யானை வழித்தடங்களை பழங்குடி மக்களின் வாழ்வை, விவசாய நிலங்களை சூறையாடி யோகா என்ற பெயரில் பல உயிர்களை காவு வாங்கியும், பல மர்ம மரணங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு நாட்டின் உயரிய பதவியில் உள்ள அதுவும் பழங்குடி மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்டப்பட்ட ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த வேதனைக்குரியது கண்டனத்துக்குரியது . அவர்கள் செய்யும் சட்ட விரோதமான செயல்களுக்கு அரசே அங்கீகாரம் வழங்குவது போன்று அமைகிறது என்றனர்.
மேலும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி திரவ்பதி முர்மு பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில், பல்வேறு கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் நிர்வாகிகள் இணைந்து கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications