மேட்டுப்பாளையம் அருகே லாரி மோதி அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - 10 பேர் காயம்
அரசுப்பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே அரசுப் பேருந்து மீது வேகமாக வந்த லாரி மோதியதில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்துக்குள் இருந்த 10 பேர் காயமடைந்தனர். பேருந்து மீது லாரி மோதிய போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Recommended Video
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளுடன் இன்று காலை சத்தியமங்கலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று கிளம்பியது.

அப்போது அந்த பஸ், சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்ற போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பேருந்து கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப்பேருந்து மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. லாரி வருவதைப்பார்த்து நின்று பின்னர் மெதுவாக வந்தது பேருந்து. எதிர்பாராத விதமாக மறைவாக இருந்த சாலையில் இருந்து வேகமாக வந்த லாரி பேருந்து மீது சடாரென்று மோதியது. அதில் நிலை தடுமாறிய பேருந்து ஒரு பக்கமாக கவிழ்ந்தது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் சிறுமுகை காவல் நிலையத்திற்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை காவல்நிலைய காவலர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த அனைவருக்கும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விபத்து குறித்து சிறுமுகை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications