Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய கல்விக் கொள்கையிலுள்ள நல்ல விஷயங்களை ஏற்க ரெடி.. ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு!

Subscribe to Oneindia Tamil

கோவை: புதிய கல்விக் கொள்கையின் நல்ல விஷயங்களைப் பின்பற்றத் தயார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்கத் தயாராக உள்ளனர் எனத் தெரிவித்தார்.

ஆளுநருடன் பங்கேற்பு

ஆளுநருடன் பங்கேற்பு

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழக ஆளுநர் உடனான தி.மு.க அரசின் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி புதிய கல்விக்கொள்கையின் நல்ல திட்டங்களை ஏற்கத் தயார் என்று கூறியுள்ளார்.

பெரியார் மண்

பெரியார் மண்

இந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் இன்று உயர்படிப்புகளை மேற்கொள்ள பெண்கள் ஆர்வமாக உள்ளனர். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்ற சமூகம் இருந்தது. ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்ற உணர்வை உருவாக்கியிருப்பதுதான் திராவிட மாடல். அதுதான் பெரியார் மண் என்றார்.

 இந்திக்கு எதிரானவர்கள் அல்ல

இந்திக்கு எதிரானவர்கள் அல்ல

இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை. தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்கத் தயாராக உள்ளனர். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஆளுநருக்கு தெரியப்படுத்தவே இதை கூறுகிறேன். நாங்கள் இந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்தியை கட்டாயமாக்கக்கூடாது. மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் எனக் கொண்டு வர வேண்டும்.

Recommended Video

    பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? - பேரவையில் பொன்முடி விளக்கம்
    பின்பற்ற தயார்

    பின்பற்ற தயார்

    புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயாராகவே இருக்கிறோம். தமிழ்நாடு கல்விக் கொள்கையை நிறுவ முதலமைச்சர் குழு அமைத்துள்ளார். தமிழ்நாட்டின் பிரச்சனைகளை ஆளுநர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.

    மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த மொழியையும் மூன்றாவது மொழியாகப் படிக்கலாம். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். இன்று கோவையில் பானிபூரி கடை நடத்துபர்கள் யார்? எனப் பேசினார் அமைச்சர் பொன்முடி.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+