கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி
கொழும்பு: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், இலங்கைக்கு நிதி அளித்து உதவ முடியாது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அன்னிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி
கடுமையான நிதி தள்ளாட்டத்தில் சிக்கிய இலங்கை வெளிநாடுகளில் வாங்கிய கடனைக் கட்ட இயலாது என வெளிப்படையாக அறிவித்தது. இப்படி கடும் நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கையில், மக்கள் கிளர்ச்சியும் வெடித்தது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கும் ஆளும் ராஜபக்சே சகோதரர்களே காரணம் என கூறி அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. மக்களின் போராட்டங்களால் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே இருவரும் தத்தமது பதவிகளில் இருந்து விலகினர். இதையடுத்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார்.

நிதி உதவி அளிக்கப்போவது இல்லை
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய அரசு பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கு புதிய கடன் உதவி அளிக்கும் எந்த திட்டமும் இல்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீடித்த பொருளாதாரத்திற்கு தேவையான ஒரு விரிவான கொள்கையை வகுக்கும் வரை இலங்கைக்கு எந்த நிதி உதவியையும் அளிக்கப்போவது இல்லை. பொருளாதார நிலைத்தன்மையை கவனத்தில் கொண்டு ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தம் செய்ய வேண்டும். தற்போதைய நெருக்கடிக்கு காரணமான கட்டமைப்புக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

பற்றாக்குறையை போக்க
அதேபோல், எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவாக மீண்டு வருவதற்கான திட்டமும் வகுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. அதேவேளையில், இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியும் இதனால், மக்கள் மீது ஏற்பட்டுள்ள தாக்கமும் கவலை அளிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் கூறுகையில், மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், பள்ளி குழந்தைகளுக்கான உணவு, ஏழைகளுக்கான பண பரிமாற்றம், போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை போக்க உதவுவதாக தெரிவித்துள்ளது.

160 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
மேலும் கூறுகையில், ''இலங்கை தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அந்நாட்டிற்கு இதுவரை 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான மருந்து பொருட்கள், பள்ளி மாணவர்களுக்கான உணவு ஆகியவைகளுக்கான நிதி தேவையானவர்களை சென்றடைவதை மேற்பார்வையிடப்படுகிறது" என உலக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனக்கு கடன் வழங்கிய நாடுகளிடம் மறு சீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்த 2 நாட்களில் உலக வங்கியின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications