தொடர் கனமழை.. தமிழகத்தில் தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணாமலை பல்கலைக்கழக பரீட்சை தள்ளிவைப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கினாலும் தற்போது வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே தான் வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளையொட்டி நிலவுகிறது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளைக்குள் நகரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் கனமழை
இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் நாளை மறுதினம் வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதலே சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நாளை மறுநாள் வரை 3 நாட்கள் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. இன்று காலை முதல் சென்னை உள்பட மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்துக்கு விடுமுறை
இந்நிலையில் தான் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்ய துவங்கியது. இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல இடங்களில் பரலவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

தேர்வுகள் தள்ளிவைப்பு
இது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும் பொருந்தும். இதனால் இன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது பல்கலைக்கழகத்தில் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு செய்துள்ளார்.

தட்டச்சு தேர்வுக்கு மாற்று தேதி
மேலும் தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வுகள் மாற்று தேதியில் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுகள் நவம்பர் 19, 20ம் தேதிகளில் நடத்தப்படும் என தட்டச்சு தேர்வு வாரியம் அறிவிப்பு செய்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications