வெறும் 19 வயசுதான்.. மொத்தம் 50 பேர்.. குமட்டும் ஆபாசம்.. எல்லை மீறின டார்ச்சர்.. ஷாக் டெல்லி!
50 பெண்களை ஆபாசமாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்
டெல்லி: ஒருத்தருக்கு 19 வயசுதான் ஆகுது.. அதுக்குள்ள 50 பெண்களின் வாழ்க்கையை பொதுவெளியில் சீரழித்துள்ளார்.. ஏகப்பட்ட பணமும் சம்பாதித்துள்ளார்.. இப்போது கம்பி கொண்டிருக்கிறார்..!
டெல்லி பரிதாபாத்தை சேர்ந்தவர் இந்த இளைஞர்.. பெயர் ரஹிம்கான்.. 19 வயசாகிறது.. படிப்பு ஒன்னும் ஏறவில்லை போலும்.. வெறும் 8-ம்கிளாஸ்தான் படித்திருக்கிறார்.
ஆனால், சோஷியல் மீடியாவில் இருக்கும் மொத்த மொள்ளமாரித்தனத்தையும் கரைத்து குடித்துள்ளார். மார்பிங் செய்யும் பல்வேறு ஆப்களை இவர் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்... இதை வைத்து, போலி அக்கவுண்ட்கள் நிறைய ஆரம்பித்திருக்கிறார்..

கவர்ச்சி
இதை வைத்து, பல பெண்கள், சிறுமிகளுக்கு குறி வைத்துள்ளார். அவர்களது போட்டோக்களை எடுத்து கொள்வாராம்.. அதை ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும், மார்பிங் செய்துவிடுவார்.. இதை வைத்து கொண்டு, சம்மந்தப்பட்ட பெண்களிடம், ஆபாச போட்டோவை அனுப்புமாறும் மிரட்டுவாராம்.. இப்படி 50 பெண்கள் இவரிடம் சிக்கி இருக்கிறார்கள். இவரது சேட்டிங் மொத்தமும் ஆபாசமும், அசிங்கமுமாய் குமட்டி கொண்டு வருகிறது.

வழக்கு
இறுதியில், இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார்... அதன்பேரில் வழக்கு பதிவு செய்த ஆர்பி புரம் போலீசார், விசாரணையை ஆரம்பித்தனர்.. அதற்குள் ரஹிம்மை காணவில்லை.. அவரது போலி அக்கவுண்ட்களை போலீசார் ஆய்வு செய்து, அவர் எங்கிருக்கிறார் என்ற அட்ரஸையும் கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளனர்.. அப்படித்தான் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் சிக்கினார் ரஹிம்.. அங்கு போய் பதுங்கி இருந்துள்ளார்..

கைது
பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், எல்லா தவறுகளையும் ஒப்புக் கொண்டார்.. பெண்களை ஆபாசமாக பார்ப்பது தனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம் என்றும், தனிபட்ட விருப்பங்களுக்காகவே இப்படியெல்லாம் செய்ததாகவும் வாக்குமூலம் தந்தார். இதையடுத்து, ரஹிமிடம் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து அதை ஆய்வு செய்தனர்... அதை பார்த்தால், அதற்கு மேல் தூக்கி வாரிப்போட்டது..

வீடியோக்கள்
50 பெண்கள் மட்டுமில்லாமல், வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.. பாதிக்கப்பட்ட பெண்களிடம் தொடர்பு கொண்டு விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர்.. எத்தனை பேரை ரஹிம் ஏமாற்றினார்? எவ்வளவு பணம் மிரட்டி சம்பாதித்தார்? என்ற விசாரணையும் நடந்து வருகிறது!
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications