1,50,000 டோஸ் ரஷ்ய கொரோனா தடுப்பூசி இந்தியா வந்து 2 வாரம் ஆச்சு.. இன்னும் அனுமதி தராத பின்னணி என்ன?
டெல்லி: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் மே 1 அன்று ஹைதராபாத்திற்கு வந்தன. முதல் பேட்ஜ் வந்து 10 நாட்களுக்கு மேலாகிவிட்டபோதிலும், இதுவரை அந்த தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்தியா ஒவ்வொரு நாளும், சராசரியாக, 3 லட்சம் கோவிட் -19 கேஸ்களை பதிவு செய்து வரும் நிலையில், பல மாநிலங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தடுப்பூசி இல்லாமல் தள்ளாடி வரும் நிலையில், ரஷ்ய தடுப்பூசி ஏன் பயன்பாட்டுக்கு வரவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு 1,50,000 ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளின் முதல் பேட்ஜ் இறக்குமதி செய்யப்பட்டன.

பரிசோதனை
அதேநேரம், நெறிமுறையின்படி, ரஷ்ய தடுப்பூசியின் 100 மாதிரிகள் பேட்ஜ் சோதனைக்காக இமாச்சல பிரதேசத்தில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்திற்கு (சி.டி.எல்) அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அதற்குப் பிறகு 14 நாட்கள் ஆகிவிட்டன, இன்னும் ரிசல்ட் தெரியவில்லை. இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளுக்கான நெறிமுறை இது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) இந்த நெறிமுறையை வகுத்துள்ளது.

நாட்கள் குறைப்பு
பேட்ஜ் சோதனை செயல்முறை முடிவுகளை கொடுக்க குறைந்தது 10 நாட்கள் ஆகும். தடுப்பூசிகளை அனுமதிப்பதை விரைவுபடுத்துவதற்காக, தடுப்பூசிகளை பரிசோதிப்பதற்கான குறைந்தபட்ச காலமாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட 28 நாட்களில் இருந்து இப்போது, 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா, ஐரோப்பா ஒப்புதல் இல்லை
இருப்பினும், ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு அமெரிக்க எஃப்.டி.ஏ அல்லது டபிள்யூ.எச்.ஓ அல்லது ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டாளர் போன்ற சர்வதேச அளவில் நம்பகமான மருந்து கட்டுப்பாட்டாளர்கள்த இன்னும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம்
நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், கூறுகையில், அடுத்த வாரத்திற்குள் தடுப்பூசி சந்தைக்கு வரும் என்று நம்புகிறேன் என்றார். "ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இந்தியா வந்துவிட்டது. இது அடுத்த வாரம் சந்தையில் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவில் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 216 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படலாம். இதில் 75 கோடி டோஸ் கோவிஷீல்ட் மற்றும் 55 கோடி கோவேக்சின் ஆகியவை அடங்கும். 15.6 கோடி டோஸ் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளும் சந்தையில் கிடைக்கும்." என்றார் வி.கே.பால்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications