1,50,000 டோஸ் ரஷ்ய கொரோனா தடுப்பூசி இந்தியா வந்து 2 வாரம் ஆச்சு.. இன்னும் அனுமதி தராத பின்னணி என்ன?
டெல்லி: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் மே 1 அன்று ஹைதராபாத்திற்கு வந்தன. முதல் பேட்ஜ் வந்து 10 நாட்களுக்கு மேலாகிவிட்டபோதிலும், இதுவரை அந்த தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்தியா ஒவ்வொரு நாளும், சராசரியாக, 3 லட்சம் கோவிட் -19 கேஸ்களை பதிவு செய்து வரும் நிலையில், பல மாநிலங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தடுப்பூசி இல்லாமல் தள்ளாடி வரும் நிலையில், ரஷ்ய தடுப்பூசி ஏன் பயன்பாட்டுக்கு வரவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு 1,50,000 ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளின் முதல் பேட்ஜ் இறக்குமதி செய்யப்பட்டன.

பரிசோதனை
அதேநேரம், நெறிமுறையின்படி, ரஷ்ய தடுப்பூசியின் 100 மாதிரிகள் பேட்ஜ் சோதனைக்காக இமாச்சல பிரதேசத்தில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்திற்கு (சி.டி.எல்) அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அதற்குப் பிறகு 14 நாட்கள் ஆகிவிட்டன, இன்னும் ரிசல்ட் தெரியவில்லை. இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளுக்கான நெறிமுறை இது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) இந்த நெறிமுறையை வகுத்துள்ளது.

நாட்கள் குறைப்பு
பேட்ஜ் சோதனை செயல்முறை முடிவுகளை கொடுக்க குறைந்தது 10 நாட்கள் ஆகும். தடுப்பூசிகளை அனுமதிப்பதை விரைவுபடுத்துவதற்காக, தடுப்பூசிகளை பரிசோதிப்பதற்கான குறைந்தபட்ச காலமாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட 28 நாட்களில் இருந்து இப்போது, 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா, ஐரோப்பா ஒப்புதல் இல்லை
இருப்பினும், ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு அமெரிக்க எஃப்.டி.ஏ அல்லது டபிள்யூ.எச்.ஓ அல்லது ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டாளர் போன்ற சர்வதேச அளவில் நம்பகமான மருந்து கட்டுப்பாட்டாளர்கள்த இன்னும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம்
நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், கூறுகையில், அடுத்த வாரத்திற்குள் தடுப்பூசி சந்தைக்கு வரும் என்று நம்புகிறேன் என்றார். "ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இந்தியா வந்துவிட்டது. இது அடுத்த வாரம் சந்தையில் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவில் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 216 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படலாம். இதில் 75 கோடி டோஸ் கோவிஷீல்ட் மற்றும் 55 கோடி கோவேக்சின் ஆகியவை அடங்கும். 15.6 கோடி டோஸ் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளும் சந்தையில் கிடைக்கும்." என்றார் வி.கே.பால்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications