இந்த 'இரண்டு' காரணங்களால் தான் கொரோனா 3ஆம் அலை ஏற்படும்.. அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை
டெல்லி: புதிய உருமாறிய கொரோனா மற்றும் எளிதாக வைரசால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளவர்கள் (susceptible population) ஆகியவை காரணமாக நாட்டில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா 2ஆம் அலையே நாட்டில் இப்போது தான் மெல்லக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இந்தச் சூழலில் கொரோனா 3ஆம் அலை குறித்து வெளியாகியுள்ள தரவுகள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
இந்நிலையில் கொரோனா 3ஆம் அலை எப்போது எதனால், ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கியுள்ளார்.

தடுப்பூசி பணிகள்
சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், "தடுப்பூசி பணிகளுக்கு இப்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தீவிர கொரோனா பாதிப்பை ஏற்படுவதை அது தடுக்கிறது. அதேபோல சமூக தடுப்பாற்றல் எனப்படும் herd immunity உருவாகவும் தடுப்பூசிகள் மிகவும் முக்கியம். கொரோனா தடுப்பூசிகள் தீவிர பாதிப்பைத் தடுத்து உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைக்கிறது.

சிறார்கள்
கொரோனா 3ஆம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் இதை உறுதி செய்ய அறிவியல்பூர்வமாக எந்தவொரு தரவுகளும் இல்லை. சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் போது, அவர்கள் எந்தவொரு அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. பெரும்பாலும் சிறார்களுக்கு லேசான கொரோனா பாதிப்பே ஏற்படுகின்றது.

2 காரணங்கள்
புதிதாகத் தோன்றும் உருமாறிய கொரோனா அல்லது வைரசால் எளிதாகப் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ள நோயாளிகள் ஆகியோர் காரணமாக கொரோனா 3ஆம் அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது கொரோனாவை கட்டுப்படுத்த நாம் உண்டாகும் பல்வேறு நடவடிக்கைகளையும் பொருத்தும் அமையும். நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.

தேவையான நடவடிக்கை
மாநில அரசுகள் அளிக்கும் தரவுகளைப் பொறுத்து கொரோனா பாதிப்பு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் ஐசியு படுக்கைகள், தனிமைப்படுத்தப்படும் படுக்கைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளும் வழிகாட்டுதல்களும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.

ஆக்சிஜன் உற்பத்தி
சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் வருகிறது. இருந்தாலும்கூட மாநில அரசுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவியையும் மருந்து மற்றும் ஆக்சிஜன் கையிருப்பதை அதிகரிக்கத் தேவையான உதவிகளையும் மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதேபோல ஸ்டீல் தொழிற்சாலைகளின் உதவியுடன் ஆக்சிஜன் உற்பத்தியும் அதிகப்படுத்தப்பட்டது.

புதிய வேக்சின்
கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல புதிய வேக்சின்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாசியில் செலுத்தும் வேக்சின் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல 2 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கான கோவாக்சின் சோதனையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Recommended Video

சிறார்களுக்கான வேக்சின்
அதேபோல டிஎன்ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Zydus Cadila வேக்சின் சோதனையும் நடைபெற்று வருகிறது. சோதனை முடிவுகள் அடிப்படையில் இதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் தேவையான முடிவு எடுக்கப்படும். அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேக்சின்களை நம் நாட்டுக் குழந்தைகள் மீது சோதனை நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications