வெறும் 2 மாதம்..கொரோனாவால் பெற்றோரை இழந்து.. அனாதையான 577 குழந்தைகள்.. அமைச்சர் ஸ்மிருதி இராணி வேதனை
டெல்லி: நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மட்டும் சுமார் 577 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் 2ஆம் அலை தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையைவிட 2ஆம் அலையில் வைரஸ் பாதிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளது.
மக்கள் அரசு வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்காததும் உருமாறிய கொரோனா வகைகளுமே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கொரோனா 2ஆம் அலையில் குறிப்பாக உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

பெற்றோரை இழக்கும் குழந்தைகள்
இந்தியாவில் தினசரி கொரோனா உயிரிழப்புகள் அதிகபட்சமாக 4000 வரை சென்றது. குறிப்பாக கொரோனாவால் குடும்பத்திலுள்ள தாய்-தந்தை என இருவரும் உயிரிழப்பதால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

577 குழந்தைகள்
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளைப் பாதுகாத்து ஆதரவளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. மாநில அரசுகளின் தரவுகளின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 1 முதல் நேற்று வரை மட்டும் நாடு முழுவதும் உள்ள 577 குழந்தைகள் தங்கள் பெற்றோரை கொரோனாவால் இழந்துள்ளனர். அவர்களின் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்" என்றார்.

யுனிசெப் ஆலோசனை
பெற்றோரை இழந்த குழந்தைகள் கைவிடப்படவில்லை என்றும், மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ஆலோசனை தேவைப்பட்டால், தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் (NIMHANS) ஒரு குழு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் யுனிசெப் உட்பட அனைத்து அமைப்புகளுடன் ஆலோசனைகளையும் நடத்தி வருகிறது.

மாநில அரசுகள்
இதேபோல பல்வேறு மாநில அரசுகளும் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்புகளை தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. புது டெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது.

5% இட ஒதுக்கீடு
ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாகச் செலுத்தப்படும் என்றும் இந்த டெபாசிட் தொகையின் மூலமாகக் கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்தக் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது, உத்தரகண்ட் அரசு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு உதவித்தொகையும் மாநில வேலைவாய்ப்பில் 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications