வெறும் 2 மாதம்..கொரோனாவால் பெற்றோரை இழந்து.. அனாதையான 577 குழந்தைகள்.. அமைச்சர் ஸ்மிருதி இராணி வேதனை
டெல்லி: நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மட்டும் சுமார் 577 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் 2ஆம் அலை தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையைவிட 2ஆம் அலையில் வைரஸ் பாதிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளது.
மக்கள் அரசு வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்காததும் உருமாறிய கொரோனா வகைகளுமே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கொரோனா 2ஆம் அலையில் குறிப்பாக உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

பெற்றோரை இழக்கும் குழந்தைகள்
இந்தியாவில் தினசரி கொரோனா உயிரிழப்புகள் அதிகபட்சமாக 4000 வரை சென்றது. குறிப்பாக கொரோனாவால் குடும்பத்திலுள்ள தாய்-தந்தை என இருவரும் உயிரிழப்பதால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

577 குழந்தைகள்
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளைப் பாதுகாத்து ஆதரவளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. மாநில அரசுகளின் தரவுகளின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 1 முதல் நேற்று வரை மட்டும் நாடு முழுவதும் உள்ள 577 குழந்தைகள் தங்கள் பெற்றோரை கொரோனாவால் இழந்துள்ளனர். அவர்களின் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்" என்றார்.

யுனிசெப் ஆலோசனை
பெற்றோரை இழந்த குழந்தைகள் கைவிடப்படவில்லை என்றும், மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ஆலோசனை தேவைப்பட்டால், தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் (NIMHANS) ஒரு குழு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் யுனிசெப் உட்பட அனைத்து அமைப்புகளுடன் ஆலோசனைகளையும் நடத்தி வருகிறது.

மாநில அரசுகள்
இதேபோல பல்வேறு மாநில அரசுகளும் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்புகளை தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. புது டெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது.

5% இட ஒதுக்கீடு
ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாகச் செலுத்தப்படும் என்றும் இந்த டெபாசிட் தொகையின் மூலமாகக் கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்தக் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது, உத்தரகண்ட் அரசு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு உதவித்தொகையும் மாநில வேலைவாய்ப்பில் 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications