Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சிவனேன்னு தான போயிட்டு இருந்தேன்' ஏன் இப்படி? சிறுத்தைப்புலி அட்டாக்கில் தப்பிய இளைஞர்..ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞரை சிறுத்தைப்புலி பாய்ந்துவந்து கடிக்க முயலும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கிறது.

ஒடிசாவை சேர்ந்த ஐ.எப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா. இவர் வன விலங்குகள் மற்றும் சுவாரசிய சம்பவங்கள் குறித்த வீடியோக்களை அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிடுவது வழக்கம்.

இவ்வாறு அவர் வெளியிடும் வீடியோக்கள் பெரும்பாலும் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஹிட் அடித்து விடும் என்றே சொல்லலாம்.

டிரெண்ட் ஆகும் வீடியோ

டிரெண்ட் ஆகும் வீடியோ

அந்த வகையில் ஐ.எப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில்தீயாக பரவி வருகிறது. இந்த சம்பவம் நடந்தது நிறைய நாட்கள் ஆகியிருக்கும் என்றாலும் தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஹிட் அடித்து வருகிறது. சிவனேன்னு சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரு இளைஞரை சிறுத்தைப்புலி ஒன்று சாலைக்கு வந்து பாய்ந்து கடித்து தாக்க முயன்ற வீடியோ தான் இப்போது டுவிட்டரில் பரவிக்கொண்டிருக்கிறது.

பாய்ந்து வந்து தாக்கிய சிறுத்தைப்புலி

பாய்ந்து வந்து தாக்கிய சிறுத்தைப்புலி

சரியாக ஒரு நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், 'இளைஞர் ஒருவர் சைக்கிளில் சாலையில் சென்றுகொண்டிருக்கிறார். சாலையின் இருபுறமும் காடுகள் போல் இருக்கிறது. மேலும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அந்த சாலையில் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. இளைஞர் சாலையின் ஓரமாக சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது திடீரென சாலையின் ஓரத்தில் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி ஒன்று இளைஞர் மீது பாய்ந்தது.

திகைத்து போன இளைஞர்

திகைத்து போன இளைஞர்

கண் இமைக்கும் நேரத்தில் அந்த சிறுத்தப்புலி சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது முன்னங்கால்களை தூக்கி போட்டு பாய்ந்து கடிக்க முயல்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறுத்தைப்புலியின் பிடியில் இருந்து அந்த இளைஞர் தப்பி விடுகிறார். அவர் சைக்கிளோடு கீழே விழுந்ததால் தான் சிறுத்தைப்புலியிடம் இருந்து தப்பியது போல் தெரிகிறது. இதனால் அய்யோ.. என பயந்து அந்த இளைஞரும் ஒரு நிமிடம் திகைத்துப்போய் பதறியடித்துக்கொண்டு மீண்டும் சைக்கிளில் வந்த பாதையிலேயே திரும்பிவிடுகிறார்.

புல்லரிக்க வைத்த வீடியோ

புல்லரிக்க வைத்த வீடியோ

அடுத்த சில நொடிகளிலேயே அந்த சிறுத்தைப்புலி மீண்டும் காட்டுப்பகுதிக்குள் ஓடி விடுகிறது. திடீரென சிறுத்தைப்புலி நம்மை தாக்கியதை அந்த இளைஞரால் நம்ப முடியாதது போல் இருந்தது. அந்த சாலையில் மேலும் இரு சைக்கிள்களில் நின்று கொண்டிருந்த நபர்கள் நடந்ததை நேரில் பார்த்து திகைத்து போய் நிற்கின்றனர். அவர்களிடம் இளைஞர் நடந்த கூறி விளக்குகிறார்'' இவ்வாறு இந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. புல்லரிக்க வைக்கும் இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோவை இது வரை 25 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கீழே, தங்கள் கருத்தைக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதில் ஒருவர் காடுகளை அழித்து வருவதால் விலங்குகள் கோபமடைந்து இருப்பதாகவும், இதனால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் பதிவிட்டுள்ளார். ஒரு சிலர் அந்த இளைஞர் உண்மையில் அதிர்ஷடக்காரர் தான் எனவும் பதிவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+