ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு.. தேர்தலில் வரும் 4 முக்கிய சீர்திருத்தங்கள்- மத்திய அரசின் புது மசோதா
டெல்லி: ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வருகிறது. பல முக்கியமான தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்கனவே பரிந்துரை செய்துவிட்டது.
முக்கியமாக காசு கொடுத்து தேர்தல் நேரத்தில் செய்தி வெளியிடுவது, பிரமாண பத்திரத்தில் பொய் சொல்லும் வேட்பாளர்களுக்கு 2 வருடம் வரை சிறை தண்டனை கொடுப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

பரிந்துரை
இந்த நிலையில்தான் தேர்தல் சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 4 சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளது. அதன்படி ஆதார் அட்டையுடன் தேர்தல் வாக்காளர் அடைய அட்டையை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைப்பது போல இதையும் இணைக்க முடியும். ஆனால் இது கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் இல்லை
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை. ஆனால் இதன் மூலம் ஆதார் அட்டையை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி வாக்களிக்க முடியும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சில சோதனை முயற்சிகளை செய்து அது வெற்றிபெற்ற நிலையில் மத்திய அரசுக்கு தனது பரிந்துரையை செய்தது. அதை முன்னிட்டே தற்போது ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பலமுறை
அதேபோல் ஒரே நபர் முன்பு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் புதிய மசோதாவின்படி ஒரே நபர் ஒரு வருடத்தில் 4 முறை வரை வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க முடியும். இதற்கு 4 கட் ஆப் டேட்கள் அளிக்கப்படும். இது முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது.

மாற்றம் 3
அதேபோல் முன்பெல்லாம் ராணுவ வீரர்கள் போன்ற சர்வீஸ் அதிகாரிகள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் போது ஆண் அதிகாரிகளின் மனைவிகள் அவர்களின் வாக்குகளை அளிக்க வசதி இருந்தது. ஆனால் பெண் சர்வீஸ் அதிகாரிகளின் கணவர்கள் இப்படி மனைவிகளின் வாக்குகளை அளிக்க முடியாது. புதிய விதியின்படி சர்வீஸ் அதிகாரிகள் ஆணோ, பெண்ணோ, அவர்களின் வாக்குகளை அவர்களின் இணையர் அளிக்க முடியும் என்ற சமத்துவமான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிகாரம்
அதேபோல் நான்காவது மாற்றத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நேரத்தில் எந்த இடத்தையும் பயன்படுத்தும் உச்சபட்ச அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தேர்தல் ஆணையம் பள்ளிகளில் தேர்தல் நடத்துவதை சிலர் எதிர்த்து இருந்தனர். இந்த நிலையில்தான் தேர்தல் நேரத்தில் தேர்தல் நடத்துவதும், வாக்கு எண்ணவும் எந்த ஒரு இடத்தையும் பயன்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications