அடுத்த ஜோஷிமத்தாக மாறும் காஷ்மீரின் டோடா மாவட்டம்? தரையில் மூழ்கும் வீடுகள்.. அடுத்தடுத்து ஷாக்
காஷ்மீரில் உள்ள டோடா மாவட்டம் தான் தற்போது நிலத்துக்குள் புதைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே அங்குள்ள ஒரு வீட்டில் திடீரென பெரிய விரிசல் விழுந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்ட போதிலு
டெல்லி: உத்தராகண்டின் ஜோஷிமத் நகரத்தை போலவே காஷ்மீரின் டோடோ மாவட்டம் தரையில் மூழ்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
ஜோஷிமத் நகரை போலவே டோடோ மாவட்டத்தில் பல்வேறு வீடுகளிலும், சாலைகளிலும் விரிசல் விழுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

ஜோஷிமத் பயங்கரம்
உத்தராகண்டின் ஜோஷிமத் நகரம் நிலத்தில் மூழ்கும் பயங்கரத்தை எதிர்கொண்டு வருகிறது. மிக மோசமான புவியியல் அமைப்பில் அமைந்துள்ளதால் இந்த நகரத்தில் எந்தவித நீர்மின் திட்டங்கள் உட்பட எதையும் செயல்படுத்தக் கூடாது என 1974-ம் ஆண்டே ஒரு கமிஷன் அறிக்கை அளித்திருந்தது. ஆனால், அந்த அறிக்கையை காற்றில் பறக்கவிட்ட அரசாங்கம், அங்கு என்னென்ன விஷயங்களை செய்யக் கூடாதோ அவை அனைத்தையும் செய்திருக்கின்றன. இதன் காரணமாக, இப்படியொரு மோசமான விதி அந்நகரத்துக்கும், மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ஜோஷிமத்தை போலவே..
நிலச்சரிவுகளும், சிறு சிறு நிலநடுக்கங்களும் ஜோஷிமத்தில் நாள்தோறும் ஏற்பட்டு, அங்குள்ள பல வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அந்நகரம் நிலத்துக்குள் புதையுண்டு வருவதால் அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஒரு நகரமே நிலத்துக்குள் மூழ்கும் கொடூரம் அரங்கேறி வரும் வேளையில், காஷ்மீரில் ஒரு மாவட்டமும் இதே கதியை எதிர்கொண்டிருக்கிறது.

நிலத்தில் மூழ்கும் டோடோ
காஷ்மீரில் உள்ள டோடா மாவட்டம் தான் தற்போது நிலத்துக்குள் புதைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே அங்குள்ள ஒரு வீட்டில் திடீரென பெரிய விரிசல் விழுந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்ட போதிலும், அது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது டோடா மாவட்டத்தில் உள்ள 6 வீடுகளிலும் இவ்வாறு பெரிய பெரிய விரிசல்கள் விழுந்திருக்கின்றன. மேலும், நாள்தோறும் அந்த விரிசல்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன.

வெளியேற்றப்படும் மக்கள்
இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் பேரில் அங்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் டோடோ மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, டோடோ மாவட்டம் நிலத்தில் மூழ்கி வருவதாக அவர் தெரிவித்தனர். மேலும், டோடோ மாவட்டம், மக்கள் வாழ தகுதியில்லாத ஆபத்தான பகுதி (Danger Zone) என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த மாவட்டத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications