அடுத்த ஜோஷிமத்தாக மாறும் காஷ்மீரின் டோடா மாவட்டம்? தரையில் மூழ்கும் வீடுகள்.. அடுத்தடுத்து ஷாக்
காஷ்மீரில் உள்ள டோடா மாவட்டம் தான் தற்போது நிலத்துக்குள் புதைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே அங்குள்ள ஒரு வீட்டில் திடீரென பெரிய விரிசல் விழுந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்ட போதிலு
டெல்லி: உத்தராகண்டின் ஜோஷிமத் நகரத்தை போலவே காஷ்மீரின் டோடோ மாவட்டம் தரையில் மூழ்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
ஜோஷிமத் நகரை போலவே டோடோ மாவட்டத்தில் பல்வேறு வீடுகளிலும், சாலைகளிலும் விரிசல் விழுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

ஜோஷிமத் பயங்கரம்
உத்தராகண்டின் ஜோஷிமத் நகரம் நிலத்தில் மூழ்கும் பயங்கரத்தை எதிர்கொண்டு வருகிறது. மிக மோசமான புவியியல் அமைப்பில் அமைந்துள்ளதால் இந்த நகரத்தில் எந்தவித நீர்மின் திட்டங்கள் உட்பட எதையும் செயல்படுத்தக் கூடாது என 1974-ம் ஆண்டே ஒரு கமிஷன் அறிக்கை அளித்திருந்தது. ஆனால், அந்த அறிக்கையை காற்றில் பறக்கவிட்ட அரசாங்கம், அங்கு என்னென்ன விஷயங்களை செய்யக் கூடாதோ அவை அனைத்தையும் செய்திருக்கின்றன. இதன் காரணமாக, இப்படியொரு மோசமான விதி அந்நகரத்துக்கும், மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ஜோஷிமத்தை போலவே..
நிலச்சரிவுகளும், சிறு சிறு நிலநடுக்கங்களும் ஜோஷிமத்தில் நாள்தோறும் ஏற்பட்டு, அங்குள்ள பல வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அந்நகரம் நிலத்துக்குள் புதையுண்டு வருவதால் அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஒரு நகரமே நிலத்துக்குள் மூழ்கும் கொடூரம் அரங்கேறி வரும் வேளையில், காஷ்மீரில் ஒரு மாவட்டமும் இதே கதியை எதிர்கொண்டிருக்கிறது.

நிலத்தில் மூழ்கும் டோடோ
காஷ்மீரில் உள்ள டோடா மாவட்டம் தான் தற்போது நிலத்துக்குள் புதைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே அங்குள்ள ஒரு வீட்டில் திடீரென பெரிய விரிசல் விழுந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்ட போதிலும், அது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது டோடா மாவட்டத்தில் உள்ள 6 வீடுகளிலும் இவ்வாறு பெரிய பெரிய விரிசல்கள் விழுந்திருக்கின்றன. மேலும், நாள்தோறும் அந்த விரிசல்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன.

வெளியேற்றப்படும் மக்கள்
இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் பேரில் அங்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் டோடோ மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, டோடோ மாவட்டம் நிலத்தில் மூழ்கி வருவதாக அவர் தெரிவித்தனர். மேலும், டோடோ மாவட்டம், மக்கள் வாழ தகுதியில்லாத ஆபத்தான பகுதி (Danger Zone) என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த மாவட்டத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications