இந்த முறை விட மாட்டேன்! டெல்லிக்குப் பறந்த ஓபிஎஸ்! நாளைக்கு இருக்கு ‘கீ’ கச்சேரி! நல்லது நடக்குமா?
டெல்லி : அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில் நாளை மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் பொருளாளராக இருந்தவருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அதிமுக அலுவலகம்
பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக அலுவலகத்தில் கலவரம் வெடித்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இபிஎஸ்ஸிடம் சாவி ஒப்படைப்பு
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பட்டு ஓபிஎஸ் தரப்பு தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. மேலும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

ஓபிஎஸ் மேல்முறையீடு
இதனையடுத்து சீல் அகற்றப்பட்டு சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக கடந்த பதினெட்டாம் தேதி விசாரணை நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடுமையாக வாதிடப்பட்டது.

நாளை மீண்டும் விசாரணை
மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் அதிமுக அலுவலக சாவி விவகாரத்தில் தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வருவாய்த் துறையினர் பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளிக்கு பிறகு அதிமுக அலுவலக சாவி விவகாரம் தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.

பலத்த எதிர்பார்ப்பு
இது தொடர்பாக விரிவான விசாரணை நாளை நடத்தப்பட இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தங்கள் தீவிர வாதங்களை முன்வைக்க இருக்கின்றனர். தற்போது அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது தரப்பு ஆதரவாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் நாளை மேல்முறையீட்டு மனுவில் விசாரணை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விசாரணை முடிவில் அளிக்கப்படும் தீர்ப்பினை பொருத்தே அதிமுக பொது குழு தொடர்பான வழக்குகளின் விசாரணையும் இருக்கும் என்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications