தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பதவி காலம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பதவி காலம் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த பாஜக ஆட்சியில் நாட்டின் 5-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமனம் செய்யப்பட்டார். பிரமதர் மோடிக்கு அடுத்து அதிகாரம் மிக்கவராக அஜித் தோவல் விளங்கினார்.
மேலும், காஷ்மீரில் உரி மற்றும் புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை நுழைந்து தாக்குதல்களை நடத்தியதற்கும் மூளையாக செயல்பட்டவர்.

இந்திய - சீன இடையிலான தோக்லாம் எல்லைப் பிரச்னையிலும் முக்கிய பங்காற்றியுள்ளாரா். இந்த நிலையில், அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
அஜித் தோவல் மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில், அஜித் தோவலின் பதவி காலம் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அஜித் தோவலின் அர்ப்பணிப்பு உணர்வு, நாட்டின் பாதுகாப்பிற்காக அவரது பங்களிப்பு உள்ளிட்டவற்றை பாராட்டி இந்த பணி நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், இந்த முறை கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் அவர் இந்த பதவியில் தொடர இருக்கிறார்.
கடந்த ஆட்சி காலம் போலவே, இந்தமுறையும் மத்திய அரசில் பிரதமர் மோடிக்கு அடுத்து அதிக அதிகாரம் மிக்கவராக அஜித் தோவல் செயல்படுவார் என்று தெரிகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஜித் தோவல், மத்திய அரசில் பல்வேறு துறைகளில் திறம்பட செயலாற்றியவர். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கான தூதராகவும் பணிபுரிந்தவர். உளவுத் துறையிலும் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications