கைது என்பது ஒருவரின் சுதந்திரத்தை குறைக்கும் கொடூர நடவடிக்கை..சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: ‛‛கைது நடவடிக்கை என்பது ஒருவரின் சுதந்திரத்தை குறைக்கும் கொடூரமான நடவடிக்கை. இதனால் ஜாமின் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தி முறைப்படுத்த புதிய சட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்'' என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சிபிஐ, ஒருவரை கைது செய்த வழக்கு தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எஸ்கே கவுல், எம்எம் சுந்தரேஷ் அமர்வு விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நாட்டில் கைது நடவடிக்கை மற்றும் ஜாமின் தொடர்பான சட்டங்கள் குறித்து சில விஷயங்களை நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிரம்பி வழியும் சிறைகள்
இந்தியாவில் உள்ள சிறைகள் விசாரணை கைதிகளால் நிரம்பி வழிகின்றன. சிறையில் இருப்போரில் மூன்றில் 2 பங்குக்கும் அதிகமானவர்கள் விசாரணை கைதிகளாக இருப்பது புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சிறையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளையில் குற்ற வழக்குகளின் தண்டனை விகிதம் என்பது மிகக்குறைவாகவே உள்ளது.

கைது அவசியம் இல்லை
மேலும் வழக்கு தொடர்பாக பெரும்பாலானவர்களை கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவரை கைது செய்யும்போது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 41 மற்றும் 41 ஏ ஆகியவற்றுக்கு உட்பட்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும். இதனை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.

சுதந்திரத்தை பறிக்கும் கைது
மேலும் ஜனநாயக நாட்டில் போலீஸ் அரசாங்கம் என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றக்கூடாது. ஜனநாயகம், போலீஸ் அரசாங்கம் என்பது ஒன்றுக்கொன்று எதிரெதிரானவை. கைது என்பது சுதந்திரத்தை குறைக்கும் கொடூரமான நடவடிக்கை. இதனால் கைது நடவடிக்கையை கவனமாக செயல்படுத்த வேண்டும்.

புதிய சட்டம்
மேலும் ஜாமின் நடவடிக்கையை எளிமைப்படுத்தவும், முறைப்படுத்தவும் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர பரிசீலிக்கலாம். இதனை மத்திய அரசு செய்யும் என நம்புகிறோம். அதோடு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளை மாநில அரசு பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications