கைது என்பது ஒருவரின் சுதந்திரத்தை குறைக்கும் கொடூர நடவடிக்கை..சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: ‛‛கைது நடவடிக்கை என்பது ஒருவரின் சுதந்திரத்தை குறைக்கும் கொடூரமான நடவடிக்கை. இதனால் ஜாமின் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தி முறைப்படுத்த புதிய சட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்'' என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சிபிஐ, ஒருவரை கைது செய்த வழக்கு தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எஸ்கே கவுல், எம்எம் சுந்தரேஷ் அமர்வு விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நாட்டில் கைது நடவடிக்கை மற்றும் ஜாமின் தொடர்பான சட்டங்கள் குறித்து சில விஷயங்களை நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிரம்பி வழியும் சிறைகள்
இந்தியாவில் உள்ள சிறைகள் விசாரணை கைதிகளால் நிரம்பி வழிகின்றன. சிறையில் இருப்போரில் மூன்றில் 2 பங்குக்கும் அதிகமானவர்கள் விசாரணை கைதிகளாக இருப்பது புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சிறையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளையில் குற்ற வழக்குகளின் தண்டனை விகிதம் என்பது மிகக்குறைவாகவே உள்ளது.

கைது அவசியம் இல்லை
மேலும் வழக்கு தொடர்பாக பெரும்பாலானவர்களை கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவரை கைது செய்யும்போது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 41 மற்றும் 41 ஏ ஆகியவற்றுக்கு உட்பட்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும். இதனை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.

சுதந்திரத்தை பறிக்கும் கைது
மேலும் ஜனநாயக நாட்டில் போலீஸ் அரசாங்கம் என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றக்கூடாது. ஜனநாயகம், போலீஸ் அரசாங்கம் என்பது ஒன்றுக்கொன்று எதிரெதிரானவை. கைது என்பது சுதந்திரத்தை குறைக்கும் கொடூரமான நடவடிக்கை. இதனால் கைது நடவடிக்கையை கவனமாக செயல்படுத்த வேண்டும்.

புதிய சட்டம்
மேலும் ஜாமின் நடவடிக்கையை எளிமைப்படுத்தவும், முறைப்படுத்தவும் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர பரிசீலிக்கலாம். இதனை மத்திய அரசு செய்யும் என நம்புகிறோம். அதோடு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளை மாநில அரசு பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications